24 டிசம்பர் 2011

ஈரோட்டுக் கிழவனின் நினைவுநாளில்

பெரியார் சொல் , “ வெறுக்கத் துணிந்தவனே வெற்றி பெறுவான் ”
இன்றைய தமிழ்ச் சூழலில் தேசியம் உட்பட

20 டிசம்பர் 2011

வெண்மணியிலிருந்து


             வெண்மணியிலிருந்து......,
                                                                        பசு.கவுதமன்.
து வெறும் வாய்மொழி வரலாறு அல்ல. சற்றேறக்குறைய இரண்டாண்டு கால களஆய்வு. முன்னாள் நாகைத் தாலுக்கா - இன்னாள் நாகை மாவட்டம்- விவசாயத் தொழிலாளர்களின் எழுச்சியின், ஆவேசத்தின் விளைவாக அழித்தொழிக்கப்பட்ட ' பண்ணை ராஜ்யங்கள் ' , மீட்டெடுக்கப்பட்ட ' சம உரிமையும், சுயமரியாதையும் ' .

இந்த பதிவுகளுக்கான ,  ஏறத்தாழ இரண்டாண்டுகால களஆய்வில் வெவ் வேறு கருத்துக்களையும், சிந்தனைகளையும் கொண்ட தோழர்களின் சந்திப்புகள் – உரையாடல்கள் – கோபங்கள் - 'சாபங்கள்' - " நீங்க மட்டுந் தான் பாக்கி " என்ற எள்ளல்கள் – ஆவேசங்கள் – ஆதங்கங்கள் – இயலாமையின் வார்த்தை வெளிப்பாடுகள் – மறுக்கப்பட்ட நியாயங்கள் – மறைக்கப்பட்ட உண்மைகள் – நிகழ்வுகளின் நினைவுகள் – நினைவுகளில் புதைந்துபோன நிமிடங்கள் – கண்கள் கசிந்து மீண்டெழுந்த கணங்கள். இப்படியான உணர்வுக் குவியல்கள் - நேரிடையாகக் கண்டவற்றின் பதிவு கள்- பல இரவுகளையும், உறவுகளையும் தொலைத்துவிட்டு நான் படித்த, சேகரித்த பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த எழுத்தாளர்களின் எழுத்துகள் – காட்சிப்படுத்தப்பட்ட படைப்புகள் – சிற்றிதழ்கள் – சிறு வெளியீடுகள் – ஆய்வுக்கட்டுரைகள் – நீதிமன்ற குறிப்புகள் – தீர்ப்புகள் – வலைதளத் தேடல்கள் என்ற இவைகளின் தொகுப்பு    நூல்வடிவம் பெற உள்ள நிலை யில் நூலின் முகப்பு – அட்டை – எப்படியாக இருக்கவேண்டும் என்ற சிந்தனை எனக்கும், பதிப்பாளர் தோழர் சாக்கோட்டை இளங்கோவன் அவர்களுக்கும்.

தோழர் ஏஜிகே அவர்களை வெண்மணித் தியாகிகளின் நினைவுத் தூணுக் கருகில் நிற்கவைத்து புகைப்படமெடுத்து அதனை முகப்பாக்குவோம் என்ற முடிவுடன் இருவருமாக அவரிடம் சொன்னோம். நீண்ட – இரண்டு, மூன்று மாதகால மவுனத்திற்குப்பின் , கடந்தவாரம், வெண்மணியில் உள்ள ஒரு தோழரிடம், தோழர் சரவணனை அனுப்பி " அவரிடம் ஒரு புத்தகத்தின் அட்டைக்காகப் புகைப்படம் எடுக்கத் தோழர்கள் வருகின்றார்கள். அவர்க ளோடு நானும் வருகிறேன். 13ம் தேதி (13. 12. 2011) காலை 11மணிக்கு அங்கு வந்துவிடுவோம் " என்ற தகவலைச் சொல்லச்சொல்லி, அந்தத் தோழரை அங்கே காத்திருக்கும்படியும் செய்தியினை சொல்லி விட்டார்.

 
13ஆம் தேதி காலை தோழர் ஏஜிகே அவர்களை அவரது அந்தணப்பேட்டை இல்லத்திலிருந்து ஒரு ஆட்டோவில் அழைத்துக்கொண்டு புறப்பட்டோம். தோழர் பிரகாஷ் ஆட்டோ ஓட்டுகின்றார். அவரோடு தோழர் சரவணன். பின்னிருக்கையில் தோழர் ஏஜிகேயுடன் நானும் தோழர் இளங்கோவனும். குண்டும் குழியுமான அந்த கப்பிச்சாலையில் எட்டு அல்லது ஒன்பது கிலோ மீட்டர் தொலைவு கீழ்வெண்மணிக்கான அந்தத் தடத்தில் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு பயணிப்பதாகச் சொன்னார் தோழர் ஏஜிகே.

அந்தணப்பேட்டையிலிருந்து, பாப்பாகோயில், நரியங்குடி, கருவேலி, சிக்கல்பத்து, புதுச்சேரி, ஆவராணி, வடக்காலத்தூர், இலுப்பூர், தேவூர், வழியாக கீழ்வெண்மணி வரும்வரை பல நிகழ்வுகளை நினைவுபடுத்தி சொல்லிக்கொண்டே வந்தார். கருவேலியின் ஒரு திருப்பத்தில், வாய்க்கால் 'சட்டர்ஸ்'. "இங்குதான் இருஞ்சியூர் நாயுடு ஆட்களுக்கும், நம்ம ஆட்களுக்குமொரு பெரிய மோதல் நடந்தது". அடுத்து சிக்கல்பத்துக்கு முன்னாடி ஒரு வளவு "இங்கதான் நெல்லு ஏத்திவற்ற பாரவண்டிய மறிச்சு மூட்டைகளை எறக்கிக்கிட்டு வரப்புவழியே போறது". என்று  ஒவ்வொரு ஊர் குறித்தும், இடம் குறித்தும் சொல்லுவதற்கு அவரிடம் நிறைய சம்பவங் களும், செய்திகளும் இருந்தன, இருக்கின்றன.


கீழவெண்மணி நுழைவு வளைவுக்கருகே ஆட்டோவிலிருந்து இறங்கினோம். காத்துக்கொண்டிருந்தத் தோழர்கள், அவர்களில்  வயது சென்ற பெண்களும், அருகில் வந்தனர். தோழர் ஏஜிகேவை பல ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கின்ற ஆவலும், பரவசமும் அவர்களில் பலருக்கு. வயதின் காரணமாக சிலரை அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. எங்களை அறிமுகப்படுத்திவிட்டு எதற்காக வந்துள்ளோம் என்பதைச் சொல்கின்றார். அப்போது அவர் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த தோழர்,
" அய்யா, இப்போதுதான் கட்டட வேலைகளைப் பார்ப்பதற்காக மாவட் டமும், ஒன்றியமும் வந்திருந்தார்கள். அவர்களிடம், ஏஜிகே வற்ராரு ஏதோ புத்தகத்துக்கு படம் எடுக்க என்று சொன்னேன். அதற்கு, யாரா இருந்தாலும் அங்கே போகவும், படமெடுக்கவும் பர்மிசன் வாங்கனும். அதனால 'மாவட் டத்துக்கிட்டே' பேசிட சொல்லுங்க என்றதனால் நான் அவரிடமே எண்களை வாங்கி வைத்துள்ளேன்" என்று சொல்லி இரண்டு எண்களைக் கொடுத்தார்.

"என்னவாம், ஏன் ஒருபடமெடுக்க நான் ஏன் அவர்களைக் கேட்கனும். இது எனக்கு சரியா...." என்று ஏதோ சொல்ல வந்தவர் , எங்களிடம்," சரி, நான் வரல. நீங்க அவர்களிடம் பேசி கேட்டுவிட்டு படம் எடுத்துக்கொண்டு வாருங்கள்" என்று சொல்லி அந்தத் தோழரிடம் நீங்க அவங்கக் கூட இருங்க என்று சொல்லிவிட்டு அவரை சந்திக்க வந்தத் தோழர்களோடு பேசத்துவங்கி விட்டார். அப்போது," இது என்னா புதுப்பண்ணையமாவுல்ல இருக்கு, அய்யாவுக்கே உரிமையில்லேன்னா வேற எந்த.... அதில உரிமையிருக்கு"  என்று ஒரு வயதான பெண்மணித் தோழர் சொன்னது என் காதில் விழுந்தது. நான் தோழர் இளங்கோவனிடம் சொன்னேன், "அண்ணே, அப்படி ஒன்றும் தேவையில்லை. நாம திரும்பிடலாம்" என்று சொன்னேன். அதற்கு தோழர் இளங்கோவன்,"இரு, தோழர் கொடுத்த நம்பரில் பேசுவோம்" என்று சொல்லி விட்டு,

அந்த எண்ணில் தொடர்புகொள்ள அதிலே பட்டுக்கோட்டையாரின் பாடல் வந்தது,"அய்யா என் பெயர் இளங்கோவன். நாங்கள் அய்யா ஏஜிகே உடன் வந்துள்ளோம். ஒரு புத்தகத்தின் அட்டைப்படத்திற்காக கீழ்வெண்மணி தியாகிகளின் நினைவிடத்தினை படமெடுக்க வந்தோம். இங்கே தோழர் களிடம் அனுமதியில்லாமல் யாரும் போகக் கூடாது. 'மாவட்டத்திடம்' பேசி பர்மிசன் வாங்கிக்கொண்டு போகனும் என்று சொல்லிவிட்டுப் போனார் களாம். உங்களிடம் பேசச்சொல்லி இந்த எண்ணைக் கொடுத்தார்கள். அய்யா ஏஜிகேயும் இங்கே இருக்கின்றார். அதுதான் பேசுகின்றேன்." என்று சொன்னதற்கு, "அது ஒன்றுமில்லை, நீங்கள் ஒன்றியத்திடம் ஒருவார்த்தை சொல்லிவிடுங்கள்." என்று மறுபக்கத்திலிருந்து - 'மாவட்டத்திடமிருந்து'- பதில்வர, தோழர் இளங்கோவன்,

அந்த மற்றொரு எண்ணில் 'ஒன்றியத்தை'த் தொடர்புகொண்டு மீண்டும் அதே செய்தியைச் சொல்ல, அவர்,"நான் 'மாவட்டத்திடம்' ஒரு வார்த்தை சொல்லிவிட்டு உங்களிடம் பேசுகின்றேன்" என்று சொல்லி ஒரு அரைமணி நேரம் பதிலில்லாமல் மீண்டும் அவரை தொடர்பு கொண்டபோது, அவர் எடுக்கவில்லை. எனவே மீண்டும் 'மாவட்டத்திடமே' பேசிவிடலாம் என்று அவரோடு தொடர்புகொண்டு," 'ஒன்றியத்திடம்' பேசினோம். அவர் உங்க ளோடு பேசிவிட்டு பேசுவதாகச் சொன்னார். அவர் இதுவரை பேசவில்லை, உங்களோடு பேசினாரா" என்று கேட்டபோது, "அவர் பேசவில்லை. நீங்கள் 'ஒன்றியத்திடம்' சொல்லிட்டிங்கன்னா, போய்எடுத்துக்குங்க" என்று சொல்லிய பிறகு கீழ்வெண்மணி வளைவிலிருந்து நினைவிடத்திற்கு அந்தத் தோழருடன் நடக்கத் துவங்கினோம். ஆனால் எங்களுடன் தோழர் ஏஜிகே வரவில்லை.



நான், தோழர் இளங்கோவன், தோழர் சரவணன் மூவருமாக வெண்மணி தியாகிகளின் நினைவிடத்திற்கு வெளியில் நின்று படமெடுத்துக் கொண்டிருந்தபோது, எதிரே புதிய நினைவிடத்திற்கான பணிகள் நடந்து கொண்டிருந்தது, அங்கிருந்து தகவல் வந்து நினைவிடத்தின் கேட் திறக்கப்பட்டது. பிறகு உள்ளே சென்று படமெடுத்துக் கொண்டு திரும்பியபோது, அங்கே, ஏஜிகே வருவாரென்று காத்திருந்த சிலர் அவர் வராத காரணமறிந்து கண்கள் விரிய உதட்டைப் பிதுக்கினார்கள். வேறு சிலரோ..... அவர்கள் சொன்னவைகளை இங்கே சொல்வது நாகரிகமாக இருக்காது. மீண்டும் கீழ்வெண்மணி வளைவுக்கு வந்தபோது தோழர் ஏஜிகேவினைச் சுற்றி ஒரு கூட்டம் அவரோடு பேசிக்கொண்டிருந்தது எல்லோரிடமும் விடைபெற்று திரும்பினோம். ஆனால் யாரும் யாரிடமும் பேசிக்கொள்ளவில்லை. ஒரு இறுக்கமான மனநிலை.


நான் ஊர் திரும்ப தோழர் ஏஜிகேயிடம் விடைபெறும்போது அவர் சொன்னார்," நான் அந்த இடத்தில், அந்தத் தியாகிகளின் நினைவிடத்தில் எங்கள் பேரவையின் வீரவணக்கத்தை செலுத்த எண்ணியிருந்தேன். அது முடியல, பரவாயில்ல" என்று சொன்னார். அப்போது எனக்குள் அந்த வலியை உணர்ந்தேன். இப்போது உள்ள தொழில்நுட்பத்தில் யாரையும் எங்கேயும், எவருடனும் வைத்துப் படமெடுத்துவிடலாம். 20க்கு20 ப்ளக்ஸ் கூட போட்டுவிடலாம். ஆனால் அதில் நேர்மையும், நாணயமும், உண்மையும் இருக்காது.



கீழ்வெண்மணி தியாகிகளின் நினைவிடம் அமைய, அந்த நினைவிடத் திறப்பிற்கு தோழர் ஜோதிபாசு அவர்கள் வந்தபோது காவல்துறையினை மீறி அவரை பேரணியாக அழைத்துச் சென்றது, கோபாலகிருஷ்ணநாயுடுவை அவர் இடத்திற்கே சென்று எச்சரித்தது என்று பலரிடம் நான் பதிவு செய்தவைகள் என் காதுக்குள் ஒலித்ததையும் மீறி அந்த வயதான பெண்மணி, வெண்மணியில் சொன்ன," இது என்னா புதுப்பண்ணைய மாவுல்ல இருக்கு, அய்யாவுக்கே உரிமையில்லேன்னா வேற எந்த.... அதில உரிமையிருக்கு" ஒலித்தது.

ஆம்,   தோழர்களே அரசியல்மயப்பட்டு விட்ட இன்றைய சிவப்புப் பண்ணை யத்தினை – மன்னிக்கவும் – அன்றைய செங்கொடி விவசாய இயக்கத்தினை யும், அன்றைக்குக் கொடிகட்டிப் பறந்த திராவிடர் விவசாயத் தொழிலாளர் இயக்கத்தினையும், தேசிய, திராவிடக் கட்சி அரசியலின் உறவுகளையும் உரசல்களையும்    மீண்டும் ஒரு அறுபது ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று பார்ப்போம் நூல் வடிவில்!  நினைவுகளும், நிகழ்வுகளுமாக, நாகை மாவட்ட விவசாயத் தொழிலாளர்களின் வீரெழுச்சியாக, மறுக்கப்பட்ட நீதிகளும், மறைக்கப்பட்ட உண்மைகளுமாக அச்சில் உங்கள் கைகளில் விரைவில்!  
                    

    

09 டிசம்பர் 2011

1989 களில் பெரியார் மையம் வெளியிட்ட வெளியீடு இது.


அணு சக்தியா?
                     அழிவு சக்தியா

1. அணுசக்தி என்றால் என்ன?
யுரேனியம் போன்ற பெரிய அணுவை நியூட்ரான், போன்ற துகள்களைக் (ஞயசவiஉடநள) கொண்டு மோதும் போது அந்த பெரிய அணு இரண்டு சிறிய அணுக்களாகப் பிளவுபடும், அவ்வாறு பிளவுபடும் போது அதிக வெப்பம் வெளிப்படும். பிளவுபட்டு உருவான அணுக்கள் கதிர்வீச்சை வெளியிடும். இந்த நிகழ்ச்சியில் வெளிப்படும் வெப்பமே அணுசக்தியாகும்.

2. அணுசக்தி நிலையம் (சூரஉடநயச ஞடிறநச சுநயஉவடிச) என்றால் என்ன?
மேற்சொன்ன வெப்பத்தை பயன்படுத்தி ஜெனரேட்டரை இயக்கி மின்சாரம் உற்பத்தி செய்யும் இடமே அணுசக்தி நிலையமாகும்.

3. அணுமின் சக்தி நிலையத்தின் ஆயுட்காலம் எவ்வளவு?
சுமார் 25 வருடங்கள் ஆகும்.

4. ஆயுட்கால முடிவில் அணுமின்சக்தி நிலையத்தில் உள்ள பிரச்சினைகள்      
    யாவை?
ஆயுட்கால முடிவில் அணுமின் சக்தி நிலைய மய்யப் பகுதியில் (ஊடிசந) கதிரியக்கப் பொருள்கள் நிரம்பியிருக்கும். எனவே, ஆயுட்கால முடிவில் அணுசக்தி நிலையத்தைப் பாதுகாப்பான முறையில் மூடி செயலிழக்கச் (னுநஉடிஅஅளைளiடிn) செய்ய வேண்டும். அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் உள்ள அணுசக்தி நிலையங்கள் சில தமது ஆயுட்காலத்தை முடித்துள்ளன. ஆனால் அவற்றை செயலிழக்கச் செய்யும் பணி இன்னும் முடியவில்லை.
உதாரணமாக இங்கிலாந்தில் விண்ட்ஸ்கேல் என்னும் இடத்தில் 33 மெகா - வாட் அணுசக்தி நிலையம் 1963-ல் செயல்படத் தொடங்கி 18 வருடமே செயல்பட்டு மேலும் செயல்பட இயலாத நிலையில் 1981-ல் செயல் இழக்கச் செய்ய முடிவு செய்யப்பட்டது. 1988ல் இந்தப்பணி முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் முடியவில்லை. இந்தச் செயல் இழக்கச் செய்யும் பணிக்காக இதுவரை ரூ. 70 கோடி செலவிடப்பட்டது. ஒரு அணு சக்தி நிலையத்தைப் புதிதாக கட்ட ஆகும் செலவைவிட அதனை செயலிழக்க செய்யும் செலவு அதிகம் என்ற உண்மை வெளிப்படத் தொடங்கியுள்ளது. இதனை ‘புதிய விஞ்ஞானி (சூநற ளுஉநைவேளைவ) என்னும் ஆங்கில அறிவியல் 11 - 12 - 1986 தேதியிட்ட இதழ் வெளியிட்டுள்ளது.

5. அணுசக்தி என்பது சிக்கனமானதா?
அணுசக்தி நிலையம் கட்ட ஆகும் செலவு அதன் ஆயுள் காலம் முழுவதும் தனது முழுத்திறன் அளவுக்கு இயங்காமல் இருப்பது, அதனைச் செயலிழக்கச் செய்ய ஆகும்செலவு, அதன் கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற ஆகும் செலவு மற்றும் அணுக்கதிர் கசிவினால் ஏற்படும் உயிரின ஆபத்துகள் மற்றும் அதன் எதிர்விளைவுகளை சரிசெய்ய ஆகும் செலவினங்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டால் அணுசக்தி சிக்கனமானதல்ல. இதனை வால்டர் பேட்டசன் (றுயடவநச ஞநவவநசளடிn) என்பவரின் ‘அணுசக்தி’ (சூரஉடநயச ஞடிறநச-1981 ஞநபேரin) என்ற ஆங்கில நூல் தெளிவாக விளக்குகிறது.



6. அணுசக்தி நிலையத்தில் கசிவுகள் காரணமாகவும், விபத்துகள் காரணமாகவும் வெளிப்படும் கதிர்களால் (சுயனயைவiடிளே) ஏற்படும் ஆபத்துகள் யாவை?
கதிரியக்க நிகழ்ச்சி பல்லாயிரக்கணக்கான வருடங்கள் நிகழ வாய்ப்புண்டு, இந்த நிகழ்ச்சியின் மூலம், ஆல்ப்பா, பீட்டா, காமா என்ற மூன்று வகை கதிர்கள் வெளிப்படுகின்றன. இவை எல்லா உயிரினங்களிலும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை. இந்த கதிரியக்கப் பாதிப்புகளை இரண்டு வகைகளாக பிரிப்பர். சில வாரங்களில் பாதிப்பு விளைவு வெளிப்படுவது முதல் வகை என்றும், அதன் பின்னும் சிலசமயம் பல வருடங்கள் கழித்து பாதிப்பின் விளைவு வெளிப்படுவது இரண்டாவது வகை என்றும் பிரிக்கப்படுகிறது. இது தவிர அந்தப் பாதிப்பின் விளைவு உடற்கூறு சார்ந்தது (ளுடிஅயவசiஉ) என்றும், மரபு வழி சார்ந்தது என்றும் பிரிப்பர். பாதிக்கப்பட்ட நபரின் உறுப்புகள் பாதிக்கப்படுவது உடற்கூறு சார்ந்த வகையாகும். பாதிக்கப்பட்ட நபரின் உறுப்புகள் குழந்தைக்கோ அல்லது பிந்திய சந்ததிக்கோ பாதிப்பு ஏற்படுவது மரபு வழி சார்ந்த வகையாகும். மரபு வழி சார்ந்த வகை பாதிப்பை கண்டுபிடிக்கும் அளவுக்கு இன்னும் அறிவியல் முன்னேறவில்லை.
கடுமையான கதிர்வீச்சு தசைகளையும், ரத்தத்தின் சிகப்பு அணுக்களையும் பாதிக்கும். அதிக கதிர்வீச்சு வயிற்றையும், சீரணக் குடல் அமைப்பையும் பாதிக்கும். தீவிரமான (நுஒவசநஅந) கதிர்வீச்சு மய்ய நரம்பு அமைப்பைப் (ஊநவேசயட சூநசஎடிரள ளுலளவநஅ) பாதிக்கும். சிறிய கதிர்வீச்சு நீண்ட காலத்திற்குப் பின் பாதிப்பை ஏற்படுத்தும். அய்ந்து வருடங்களுக்குப் பின் லிக்யூமியா என்னும் கான்சர் நோய் வரும். 20 வருடம் கழித்து சில வகை கான்சர் நோய் வரலாம். கண்ணில் காட்ராக்ட் நோய் வரலாம். தோல் பாதிக்கப்படலாம். பிள்ளை பெறும் சக்தி இழக்கப்படலாம்.
தாவரத்தில் கலக்கும் கதிர்வீச்சு, அதை உண்ணும் விலங்குகளின் மாமிசம் மற்றும் பால் ஆகியவற்றை உட்கொள்ளும் மனிதர்களைச் சேர்த்து பாதிப்பை ஏற்படுத்தும். இப்படி பல வகையான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

7. மற்ற விபத்துகளால் வரும் ஆபத்துக்கும், கதிரியக்கத்தால் வரும் ஆபத்துக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு என்ன?
1) மற்ற பெரும்பாலான விபத்துக்களால் வரும் ஆபத்து ஒரு குறிப்பிட்ட மனிதனோடு அல்லது மனிதர்களோடு முடிவடைந்து விடுகின்றது. கதிரியக்க ஆபத்து தனி மனிதனோடு நிற்காமல் சக்திகளையும் பாதிக்கிறது.
2) கதிரியக்க வீச்சு பெருமளவுக்கு இருக்கும்போது பாதிக்கப்பட்ட பகுதிகள் மனிதன் மற்றும் உயிரினங்கள் வாழும் தகுதியை இழந்து விடுகிறது. இது எப்போது சீரடையும் என்று சொல்ல முடியாது.
3) மற்ற எந்த ஒரு பெரிய விபத்திலும் ஏற்படும் மனித உயிர் இழப்பு எண்ணிக்கையை விட அணுமின் நிலைய பெரிய விபத்தின் காரணமாக வரும் கதிரியக்கத்தால் ஏற்படும் மனித உயிர் இழப்பு மிக அதிகமாக இருக்கும். இலட்சக்கணக்காகவும் இருக்கும், பெரிய நகரங்களே நாசமாகிவிடும். (எ.கா.) சோவியத்தில் செர்னோபிள் விபத்து. உதாரணமாக, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பெரியவிபத்து ஏற்பட்டால் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட அருகாமை பகுதி மக்களை அப்புறப்படுத்தியாக வேண்டும். மீண்டும் பழைய மாதிரியில் அப்பகுதியில் மக்களை குடியமர்த்துவது கேள்விக் குறியாகி விடும்.
4) எதிரி நாடு குண்டு வீசி அணுமின் நிலையத்தை தாக்கினால் ஏற்படும் விபத்து ஒரு அணுகுண்டு வெடிப்பதால் ஏற்படும் விபத்துக்கு சமமாகும். எனவே ஒரு நாட்டில் உள்ள அணுமின் நிலையங்கள் எதிரி நாட்டின் கைவசம் உள்ள இலவச அணுகுண்டுகளாகும்.

8. இப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் கதிரியக்க கசிவுகளும் விபத்துகளும் அணுசக்தி நிலையங்களில் ஏற்பட்டது உண்டா?
1952 டிசம்பர் 12-ல் கனடா நாட்டில் சாக் நதி அருகில் இருந்த அணு சக்தி நிலையத்திலும், 1957-ல் இங்கிலாந்தில் விண்ட்ஸ்கேல் அணுசக்தி நிலையத்திலும், 1947- 58ல் ரஷ்யாவில் கிஷ்டின் அருகில் உள்ள அணுசக்தி நிலையத்திலும், அமெரிக்காவில் 1961 சனவரி 3-ல் இடாகோ மாநில அணு சக்தி நிலையத்திலும், 1966 அக்டோபர் 5-ல் டிடாராய்ட் அணுசக்தி நிலையத்திலும் பெரிய விபத்துகள் நடந்தன.
இந்த வரிசையில் பெரிய விபத்தாக 1979 மார்ச் 28-ல் அமெரிக்காவில் மூன்று மைல் தீவு அணுசக்தி நிலையத்தில், அணுசக்தி நிலைய மய்யப் பகுதி (ஊடிசந) உருகி ஆபத்தான கதிர்கள் வாயு மண்டலத்தில் (ஹவஅடிளயீhநசந) கலந்தன. இதனால் பல நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். அந்த அணுசக்தி நிலையத்தை சுற்றி வாழ்ந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். பாதிக்கப்பட்ட மய்யப் பகுதியை தொலைக் கட்டுப்பாட்டு தொலைக்காட்சி ஆய்வு (சுநஅடிவந கூஏ ஐளேயீநஉவiடிn) 1982 சூலையில் தான் செய்ய முடிந்தது. அதன்பின் உலகின் மிகப் பெரிய விபத்து 1988 ஏப்ரல் 24ல் ரஷ்யாவில் செர்னோபிள் அணுசக்தி நிலையத்தில் ஏற்பட்டது. ரஷ்யாவை தவிர்த்து 20 நாடுகளைப் பாதித்து 2000 கிலோமீட்டர் வரை கதிர்கள் இந்த விபத்தினால் பரவின. தொலைக்கட்டுப்பாட்டு ஹெலிகாப்டர்கள் மூலம் 5000 டன் சாந்து மண், ஈயம், போரான் போன்றவை மேலும் கதிர்கள் பரவுவதை தடுப்பதற்காக அணுசக்தி நிலைய மய்யத்தின் மீது கொட்டப்பட்டன. பின்னர் 5000 டன் உலோக அமைப்புகளையும், 3,00,000 கியூபிக் மீட்டர் கான்கிரீட்டையும் கொண்டு அதனை மூடினர். செர்னோபிளைச் சுற்றி 100கி.மீ வரை வாழ்ந்து வந்த மக்களை 1,100 பேருந்துகளைப் பயன்படுத்தி அரசு அப்புறப்படுத்தியது. செர்னோபிள் விபத்தினால் அய்ரோப்பிய நாடுகளில் காய்கறி, தானியம், பால், வெண்ணெய் உள்ளிட்ட அனைத்து விவசாய, கால்நடை விவசாயப் பொருள்களும் மனிதர்கள் உண்ண லாயக்கற்றவை என தடை செய்யப்பட்டன. செர்னோபிள் விபத்தால் போலந்து ரூ. 70 கோடி மதிப்பு இழப்பையும், இத்தாலி ரூ. 200 கோடி மதிப்பு இழப்பையும், மேற்கு ஜெர்மனி ரூ. 650 கோடி இழப்பையும் அறிவித்துள்ளனர். மேற்கு ஜெர்மனி அரசு தமது நாட்டில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 480 கோடி நஷ்ட ஈடு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. செர்னோபிள் விபத்துக்கு முன் அதன் தலைமைப் பொறியாளர் நிக்கோலாய் போமின் என்பவர் செர்னோபிள் அணுசக்தி நிலையத்தில் பெரிய விபத்துக்கான வாய்ப்பு 10,000 வருடங்களில் ஒன்றாக இருப்பதாகவும், மூன்று பாதுகாப்பு வழிகளுடன் எந்த விபத்திலிருந்தும் பாதுகாக்கக் கூடிய நம்பிக்கையான கட்டுப்பாடு முறைகள் இருப்பதாகவும் ‘சோவியத் வாழ்க்கை’ (ளுடிஎநைவ டுகைந) என்ற இதழில் தெரிவித்திருந்தார். விபத்திற்குப் பின் இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் கூhந ஞரடெiஉ ஊசவைiஉயட ஆயளள நுநேசபல ஞசடினரஉவ என்னும் பொதுமக்கள் கண்காணிப்பு அமைப்பு 1985-ல் அமெரிக்காவில் 3000 அணு விபத்துக்கள் நடந்துள்ளதாக அறிவித்துள்ளது. ஒரு ஜெர்மன் அறிக்கைப்படி 1970-களில் மூன்று நாட்களுக்கு ஒரு அணு விபத்து நடந்து வந்திருந்தாலும், ஜெர்மன் அரசு 14 அணு விபத்துகள் மட்டுமே நடந்ததாக அறிவித்தது. பிரிட்டனில் விண்ட்ஸ்கேல் அணுசக்தி நிலைய விபத்தைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கின் காரணமாக 1950க்கும் 1977க்கும் இடைப்பட்ட காலத்தில் 177 விபத்துகள் நடந்திருப்பதை அரசு ஒத்துக்கொண்டது. னுநச ளுயீநைபநட என்னும் மேற்கு ஜெர்மனி இதழின் படி சர்வதேச அணு சக்தி அமைப்பு (ஐவேநசயேவiடியேட ஹவடிஅiஉ நுநேசபல ஹபநnஉல) 250 கசிவு விபத்துக்களை வெளி உலகிற்குத் தெரியாமல் மறைத்துள்ளது.
இவ்வாறு உலககெங்கும் நடக்கும் அணுசக்தி நிலைய விபத்துகள் அரசுகளால் மறைக்கப்பட்டு வந்தாலும், மக்களின் விழிப்புணர்ச்சியுடன் கூடிய போராட்டங்கள் உண்மைகளை வெளிக்கொணர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை கூட்டியுள்ளன.

9. இந்தியாவில் எவ்வளவு அணுசக்தி நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன? அவற்றில் விபத்துக்கள் நடத்தப்படுகின்றனவா?
இந்தியாவில் சுமார் 6 அணுசக்தி நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. சுமார் 9 அணுசக்தி நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், அணு சக்தி தொடர்புடைய நிலையங்கள் சுமார் 40 உள்ளன.
தமிழ்நாட்டில் கல்பாக்கத்தில் அணுசக்தி நிலையங்கள் 2 செயல்படுகின்றன. திருநெல்வேலி அருகே ஒரு அணுசக்தி நிலையம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அணுசக்தி நிலையங்களில் உள்ள ஆபத்து மிக்க கதிரியக்க கழிவுகளை திருநெல்வேலி அருகே கூடன்குளம் பகுதியில் புதைக்க அரசு சில வருடங்களுக்கு முன் அறிவித்து எதிர்ப்பின் காரணமாக செயல்படுத்தவில்லை. இப்போது திருநெல்வேலி அருகே திட்டமிடப்பட்டுள்ள அணுசக்தி நிலையப் பகுதியில் மேற்சொன்ன திட்டம் ரகசியமாக மேற்கொள்ளப்படுமா என்பது தெரியவில்லை.
இந்தியாவில் அணுசக்தி நிலையங்களின் கசிவுகளும், விபத்துகளும் ஏற்பட்டிருக்கின்றன. னுநச ளுயீநைபநட என்ற ஜெர்மன் இதழின்படி சர்வதேச அணுசக்தி அமைப்பு மறைத்த 250 கசிவுகளில் இந்தியாவில் தாராப்பூர் அணுசக்தி நிலையத்தில் ஏற்பட்ட கசிவும் ஒன்றாகும். பேரா. திரேந்திர சர்மா என்பவர், 1972-ல் தாராப்பூர் அணுசக்தி நிலையத்தில் ஒரு விபத்து நடந்து இரு இளம் பொறியாளர்கள் இறந்ததாக அறிவித்துள்ளார். இவர் எழுதிய ‘ஐனேயை’ள சூரஉடநயச நுளவயவந’ என்ற நூலில் இந்தியாவில் ஏற்பட்ட விபத்துக்களைப் பற்றி விவரமாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் காண்ட்ராக்டர்கள் மூலம் சாதாரண தொழிலாளர்கள் ஊயளரயட டுயbடிரச எளிதில் கிடைப்பதால் மேல்நாடுகளில் தொலைக் கட்டுப்பாடு மூலம் செய்யப்படும் ஆபத்தான வேலைகளைச் செய்ய இந்த சாதாரண தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இத்தொழிலாளர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரே ஆவர். இவர்களில் யாரும் பார்ப்பனர் கிடையாது. ஆனால் உயர் பதவிகள் அக்கிரகாரமாய் இருப்பதற்கு ஆதாரம் இதோ:

மொத்தம் தாழ்த்தப் பட்டவர்கள் பிற்படுத்தப் பட்டவர்கள் பார்ப்பனர்கள்
34 0 0 34

1972-ல் தாராப்பூர் அணுசக்தி நிலையத்திற்குச் சென்ற அமெரிக்க நிபுணர் கிளிபோர்டு பெக் (ஊடகைகடிசன க்ஷநஉம) அங்கு கதிரியக்க கழிவுகளை நீண்ட குச்சிகளைக் கொண்டு சாதாரண தொழிலாளர்கள் கையாளும் பணியில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். 250 வேலையாள்கள் மொத்தமாகப் பணியாற்றும் அளவுக்கு திட்டமிடப்பட்டிருந்த அந்த அணுசக்தி நிலையத்தில் 1972-க்குள் 1300 வேலையாட்கள் பணியிலிருந்து அகற்றப்பட்டது அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார். அதிகபட்ச கதிரியக்க பாதிப்புக்குள்ளானதே இந்தப் பணி அகற்றலுக்கு காரணமாகும். பணிப் பாதுகாப்பு கதிர்வீச்சு பாதுகாப்பு போன்றவை இல்லாமல் இப்படிப்பட்ட கொடுமைகளை அனுபவிப்பவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே ஆவர்.
1979-ல் தாராப்பூர் அணுசக்தி நிலையத்தில் ஒரு விபத்து ஏற்பட்டது. அதே ஆண்டு ஜுலை 24ல் கல்பாக்கம் அணுசக்தி நிலையத்தை பிரதமர் துவக்கி வைத்துக் கொண்டிருக்கையில் ஒரு விபத்து ஏற்பட்டது. 1982 மார்ச் 4-ல் ராஜஸ்தான் ராப்ஸ் அணுசக்தி நிலையத்தில் விபத்து ஏற்பட்டது. ரூ. 8 கோடி செலவு செய்தும் இன்னும் பழுது பார்க்கும் பணி முடியவில்லை. கதிரியக்க கசிவை நிறுத்த முடியவில்லை. இது 15 - 6 - 86 இந்தியன் எக்ஸ்பிரஸ் மலரில் வெளியானது. பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளிலு.ம் இந்தியாவில் அணுசக்தி நிலையம் கட்டியுள்ளார்கள். அய்தராபாத்தில் உள்ள அணு எரிபொருள் வளாகத்தில் கழிவுப் பொருள்களை பாதுகாப்பாக வைக்காததால் அது வெடித்து ஒரு பெண்ணும், 3 பையன்களும் இறந்தனர். """"புரோப்’’ (ஞசடிநெ) இதழ் இதனை வெளியிட்டது. இவ்வாறு இந்திய அணுசக்தி நிலையங்களில் கசிவுகளும், விபத்துகளும் நடந்து வருகின்றன.

10. அணுசக்தி அபாய சம்பவங்களை எதிர்த்து இதுவரை மக்கள் போராட்டங்கள் நடைபெற்று இருக்கின்றனவா? அவற்றின் சாதனைகள் யாவை?
உலக அளவில் அணுசக்தி அபாயத்தை எதிர்த்து """"பசுமை அமைதி’’ (ழுசநநn ஞநயஉந) என்னும் இயக்கம் 1970ல் கனடாவில் துவக்கப்பட்டது. அணுசக்தி அபாயம் மட்டுமின்றி சுற்றுபுற சூழல் பாதுகாப்பும் இதன் நோக்கமாகும். வன்முறையற்ற நேரடிப் போராட்டங்களில் இந்த அமைப்பு ஈடுபடுகிறது. உலக அளவில் பல நாடுகளில் அதன் உறுப்பினர் உள்ளனர். அணுக்கரு கழிவுகளை கடலில் கலப்பதை எதிர்த்து இங்கிலாந்து, மேற்கு ஜெர்மனி, ஹாலந்து, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, சோவியத் ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற பல நாடுகளில் இந்த அமைப்பு போராட்டங்கள் நடத்தி உள்ளது. இதன் காரணமாக பல நாடுகள் தமது அணுசக்தி கொள்கையை மறுபரிசீலனை செய்யத் தொடங்கின. சுவீடனில் கட்டி முடிக்கப்பட்ட 9 அணுசக்தி நிலையங்களையும், பாதி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இருந்த 2 அணுசக்தி நிலையங்களையும் 2010-ம் ஆண்டுக்குள் மூடிவிட கருத்து வாக்கு எடுப்பின் மூலம் அரசு முடிவு செய்து விட்டது.
இத்தனைக்கும் சுவீடன் மின்தேவையில் 30ரூ அணுசக்தி நிலையம் ஈடு செய்து இருந்தது. ஆஸ்திரிய நாட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஒரே ஒரு அணு சக்தி நிலையமும் துவக்கப்படாமல் இருக்கிறது. டென்மார்க் நாட்டிலும் இதே நிலைதான். செர்னோபிள் விபத்துக்குப் பின் இந்தப் போக்கு தீவிரமானது. யூகோஸ்லேவியா நெதர்லாந்தில் நடந்த கருத்து வாக்கெடுப்பில் 70ரூ மக்கள் அணுசக்தி திட்ட வளர்ச்சியை எதிர்க்கவே, புதிய அணுசக்தி திட்டங்கள் கைவிடப்பட்டன. மேற்கு ஜெர்மனியில் நடந்த கருத்து வாக்கெடுப்பில் 60ரூ மக்கள் புதிய அணுசக்தி நிலையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்தார்கள். 54ரூ மக்கள் இருக்கும் அணுசக்தி நிலையங்களையும் மூட ஆதரவு தெரிவித்தார்கள். பிரிட்டன், மேற்கு ஜெர்மனி, இத்தாலி முதலிய நாடுகளில் அணுசக்தி எதிர்ப்பு அரசியல் பிரச்சனையாகிவிட்டது என்றும், மேற்கு ஜெர்மனியில் சமூக ஜனநாயக கட்சி 10 வருடத்தில் மேற்கு ஜெர்மனி அணுசக்தி நிலையங்களை மூடுமாறு கோரியுள்ளது என்றும், இத்தாலியில் சோஷலிஸ்டுகள் இதே கோரிக்கையை வலியுறுத்துகிறார்கள் என்றும், பிரிட்டனில் தொழிற்சங்க காங்கிரஸ் மறு பரிசீலனை முடியும்வரை புதிய அணுசக்தி திட்டங்களை கிடப்பில் போடுமாறு கோரியுள்ளதாகவும் நியூஸ்வீக் (சூநறள றுநயம) 15-9-86 இதழ் வெளியிட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் பல கோடி ரூபாய் செலவில் கட்டி முடி.க்கப்பட்ட ஒரே அணுமின் நிலையத்தையும் மூடிவிட அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவிலும் அணு சக்தி அபாய எதிர்ப்பு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. கேரளாவில் கொச்சியில் நடந்த ஆய்வரங்கில் கொத்தமங்கலத்தில் அமைக்கப்பட இருக்கும் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை 28-6-84 இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது. கேரளாவில் உள்ள மக்கள் எதிர்ப்பு காரணமாக பெரியாறு நதியின் வடகரைகளில் பூதகான் கெட்டுவில் (க்ஷடிடிவாயn முநவவர) தொடங்க இருந்த 2000 மெகாவாட் அணுசக்தி நிலையம் கைவிடப்பட்டது. தென் மாநிலங்களில் அணுசக்தி நிலையம் இல்லாத ஒரே மாநிலம் கேரளா ஆகும். கர்னாடகா மாநிலத்தில் காய்கா மாவட்டத்தில் துவக்கப்பட உள்ள அணுசக்தி நிலையத்தை எதிர்த்து அந்தப் பகுதி மக்கள் பெரிய போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். குஜராத் கக்ரபாரா பகுதியில் அணுசக்தி நிலையத்தை எதிர்த்து மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. எனவே உலகிலும், இந்தியாவிலும் அணுசக்தி அபாயத்தை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்று வந்துள்ளன. இதன் விளைவாக பல அரசுகள் அணுசக்தி நிலையங்களைக் கைவிட்டு வருகின்றன. பல அரசுகள் அணுசக்தி கொள்கைகளை மறுபரிசீலனை செய்து வருகின்றன. பொதுவாக பாதுகாப்பு அம்சத்தின் முக்கியத்துவம் கூடியுள்ளது.

11. கல்பாக்கம் அணுமின் நிலையம் சாதாரணமாகச் செயல்படும் போது ஏற்படும் ஆபத்துகள் யாவை?
பொதுவாக அணுசக்தி நிலையம் செயல்படும்போது கதிரியக்க கழிவுகளில் ஒரு பகுதி வாயு மண்டலத்தில் கலக்கப்படும். மேலும் ஒரு பகுதி அருகில் உள்ள கடலில் கலக்கப்படும். மிகவும் ஆபத்தான கதிரியக்க கழிவுகள் நிலையத்தில் மய்யப் பகுதியிலேயே இருக்கும். இந்தக் கழிவுகள் எவ்வாறு பாதுகாப்பாக அகற்றி, பாதுகாப்பாக வைப்பது என்பது உலக அளவில் சிக்கலாகவே உள்ளது. வாயு மண்டலத்தில் கலப்பது குறிப்பிட்ட அளவுக்கு அதிகமானால் அருகாமைப் பகுதி மக்களும், உயிரினங்களும், விவசாயமும் பாதிக்கப்படும். அதேபோல் கடலில் கலக்கப்படுவது ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டுமானால் கடல் ஆபத்தான கதிரியக்க அளவைப் பெற்று, அந்தப் பகுதி மீனவர்களும், மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களும், அவற்றை உட்கொள்ளும் மனிதர்களும் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. சில ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் சுருகா அணுசக்தி நிலையம் அருகே உள்ள கடலில் கதிரியக்கம் அபாய நிலையில் இருந்தது. உடனே அதிகாரிகள் மார்க்கெட்டில் விற்று வந்த மீன்களை தடை செய்து அப்புறப்படுத்தினர். பிரிட்டனில் லிண்ட்ஸ்கேல் அணுசக்தி நிலைய கதிரியக்க கழிவுகள் கடலில் கலந்து இன்று உலகிலேயே மிகவும் அதிக கதிரியக்கமுள்ள ஆபத்தான பகுதியாக அயரிஷ் கடல் இருக்கிறது. கேரளாவில் ஆல்வாயில் தோரியம் உற்பத்தி செய்யும் நிலையத்தின் கதிரியக்க கழிவுகள் 1981 வரை அரபிக் கடலில் கலக்கப்பட்டு வந்தது. பின் மக்கள் எதிர்ப்பு காரணமாக அது நிறுத்தப்பட்டது. கல்பாக்கத்தில் இப்போது கதிரியக்க கழிவுகள் கடலில் கலக்கப்படுகிறது. 10 சதுர மைல் பரப்பிற்கு மீனவர்கள் இந்த பகுதியில் மீன் பிடிக்கக்கூடாது என்ற நிபந்தனையிலும், கடலில் கதிரியக்க அளவுகளை தொடர்ந்து கண்காணித்து குறிப்பிட்ட அளவுக்குமேல் கதிரியக்க அளவு இருந்தால் கழிவுகள் கடலில் கலப்பது நிறுத்தப்படுகிறது என்ற நிபந்தனையிலும் இவ்வாறு கலப்பது நடக்கிறது. சில வருடங்களுக்கு முன் கல்பாக்கம் அருகாமையிலுள்ள கிராமப்புறங்களில் விவசாயத்தின் பயிரின் அடியில் நீர் இருந்தும் இவைகள் கருகி விவசாயம் பாதிக்கப்பட்டது. கல்பாக்கம் அணுசக்தி நிலையத்தில் காற்றில் கலக்கும் கதிரியக்க கழிவுகள் அளவுக்கு அதிகமாக இந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். கதிரியக்கம் கண்ணுக்கு தெரியாது. ஜி. எம், கணக்கி போன்ற கதிர்வீச்சு அளக்கும் கருவிகள் மூலமே அதை உணர முடியும். இப்போதைக்கு அரசிடம் மட்டுமே இக்கருவிகள் உள்ளன.
எனவே தகவலுக்கு அரவை மட்டுமே நம்ப வேண்டியுள்ளது. மாறாக சமூக சேவை அமைப்புகளிடம் இக்கருவி இருந்தால் விபத்து நடப்பதை, கசிவு நடப்பதை உடனே கண்டுபிடித்து உடனே உணரமுடியும்.

12. கதிர்வீச்சில் பாதுகாப்பு அளவு என்று ஏதும் உள்ளதா?
சர்வதேச கதிர்வீச்சு பாதுகாப்பு அமைப்பு (ஐஊசுஞ-ஐவேநசயேவiடியேட ஊடிஅஅளைளiடிn குடிச சுயனயைவiடிn ஞசடிவநஉவiடிn) ஒரு மனிதர் கதிர்வீச்சினால் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டால் ஆபத்து இல்லை என்று தீர்மானிக்கிறது. இந்த அளவும் கதிர்வீச்சுப் பற்றிய அறிவு வளரவளர குறைக்கப்பட்டே வந்துள்ளது. இவ்வளவையும் நிர்ணயிக்கும் காரணியாக ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்ட பொழுது அம்மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பும், அவர்கள் இவ்வளவு கதிர்வீச்சை வாங்கியிருப்பார்கள் என்று கணக்கீடுகள் மூலம் கணிக்கப்பட்ட அளவையும் இணைத்துப் பார்ப்பதாக உள்ளது. ஆனால் பின்பு முதலில் கணக்கிட்டதைவிட குறைந்த அளவுள்ள கதிர்வீச்சே அம்மக்கள் பெற்றார்கள் என்பது தெரிந்தவுடன் ஐஊசுஞ சில விதிமுறைகளை முடிவு செய்துள்ளது. அதன்படி எவ்வளவு குறைந்த அளவாயினும் கதிர்வீச்சு தீமையானதே. கூடுமானவரை அதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க இயலாத நிலையில் தம்மால் முடிந்தவரை குறைந்த அளவே கதிர்வீச்சு உள்ள பகுதிகளில் வேலை செய்ய வேண்டும்.

13. அணுசக்தி நிலையம் ஒரு பகுதிக்கு வருவதால் அந்தப் பகுதியில் அபிவிருத்தி ஏற்படுமா?
இந்தியாவில் அணுசக்தி நிலையத்தை சுற்றி 4 கி.மீ. வரை மக்கள் குடியிருப்பு அனுமதிக்கப்படாது. 16 கி.மீ வரைக்கும் 10,000த்துக்கும் அதிகமான மக்கள் வசிக்க அனுமதிக்கப்படமாட்டாது. 40 கி.மீ வரை 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த நிபந்தனைகளை மீறும் கிராமங்களும், ஊர்களும் அகற்றப்படும். பல கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் அணுசக்தி நிலையத்தில் சில நூறு பேருக்கே வேலையுண்டு. அதிலும் மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லாததால், தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு மண்டல குழு அறிக்கைப்படி சரியாக அமுல்படுத்தப்படாததால், மத்திய அரசு வேலைக்கு ஆள் தேர்ந்தெடுப்பதால் அந்தப் பகுதி மக்களுக்கு வேலை கிடைக்கும் என்ற உறுதி கிடையாது. கதிர் இயக்க ஆபத்தின் காரணமாக நிலங்களின் விலை குறைய வாய்ப்புண்டு. சுமார் 100 கி.மீ. வரை பெரிய தொழிற் சாலைகள் புதிதாக வர வாய்ப்பு குறையலாம்.

14. அணுசக்தியை விட்டால் வேறு மாற்று என்ன இருக்கிறது?
இந்தியாவில் மய்ய மின்சார அமைப்பின் (ஊநவேசயட நுடநஉவசiஉவைல ஹரவாடிசவைல) மதிப்பீட்டுப் படி 75,000 மெகாவாட் மொத்த நீர் மின் திட்ட வாய்ப்பில் 12ரூ மட்டுமே நீர்மின் நிலையங்கள் மூலம் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் 1120 கோடி டன் நிலக்கரி மண்ணில் உள்ளது. இந்தியாவில் மின்சாரம் கொண்டு செல்லும் போது சுமார் 20ரூ விரயமாகிறது. சீனாவில் இந்த வகை இழப்பு 7.57ரூ மட்டுமே. இது தவிர சூரிய ஆற்றல், புவி வெப்ப ஆற்றல், காற்று ஆற்றல், கடல் அலை போன்ற பல வழிகளில் மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது. பம்பாயில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவை சுமார் 1500 கி.மீ. குழாய் மூலம் வட மாநிலங்களுக்கு அனுப்பி மின் உற்பத்தியும், தொழில் உற்பத்தியும் நடைபெறுகிறது. மேலும் இன்றும் பல நூறு கோடி ரூபாய் மதிப்புடைய இயற்கை எரிவாயு பம்பாயில் எரித்து விரயமாக்கப்படுகிறது. குழாய் மூலம் அதனை தமிழ்நாடு வரை கொண்டு வந்தால் தென் மாநிலங்களின் மின் பற்றாக்குறை தீரும். தொழில் வளரும். தமிழ்நாட்டை பொறுத்தவரை நெய்வேலி அனல்மின் நிலையம் மின்சார உற்பத்தி முழுவதையும் தமிழ்நாட்டுக்கு வழங்கல், மற்ற அனல் மின் நிலையங்களுக்கு (தமிழ்நாட்டின் பொறியியல் பொருட்களுக்கு ஈடாக அந்நிய செலாவணியின்றி) ஆஸ்திரேலியா தர முன்வந்துள்ள நிலக்கரியைப் பயன்படுத்தி நிலக்கரி பற்றாக்குறை நோயை ஒழித்தல், தஞ்சை, தென் ஆற்காடு மாவட்டத்தில் கிடைக்கும் இயற்கை வாயுவைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்தல் போன்றவற்றால் தமிழ்நாட்டின் மின் தேவைகளை நிறைவு செய்ய முடியும்.
கூடன்குளம் அணுமின் நிலையம்:-
திருநெல்வேலி மாவட்டத்தில் கூடன்குளம் பகுதியில் இரண்டு 1000 மெகாவாட் அணுமின் நிலையம் கட்ட மத்திய அரசு முடிவு செய்துவிட்டது. பல்லாயிரம் கோடி மதிப்புள்ள இத்திட்டம் சோவியத் அரசு கூட்டுடன் தொடங்கப்படுகிறது. சோவியத் அரசு தனது நாட்டில் மக்கள் எதிர்ப்பின் காரணமாக இதுவரை ஏழு அணுமின் நிலையங்களை மூடிவிட்டது. அதே நேரத்தில் தன் வசமுள்ள இது தொடர்பான தொழிற்நுட்பத்தையும், கருவிகளையும் இந்தியாவின் தலையில் கட்ட முடிவு செய்துள்ளது. இதையே """"செர்னோபிள் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட பேரழிவிற்குப் பிறகு அதன் உபயோகமற்ற பாகங்களை இந்தியாவின் தலையில் கட்ட சோவியத் நாடு விரும்பியது. அதுதான் கூடன்குளம்’’ என்று பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத் மலானி கூறியுள்ளார்.
ஹளுஐனுநு (அசைடு) 16-11-88 இதழ் மூலம் கூடன்குளம் தொடர்பாக பின்வரும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கூடன்குளம் நிலப்பகுதி அணுமின் நிலையம் கட்ட பொருத்தமானதா என்ற ஆய்வினை முறையாகச் செய்யாமல் அங்கு அணுமின் நிலையம் கட்ட முடிவு செய்துள்ளது. கூடன்குளம் அருகாமையில் உள்ள கிராம மக்கள் வெளியேற்றப்படப் போகிறார்கள். 75 கி.மீ. நீளத்திற்கு கூடன்குளம் அருகாமை கடல் பகுதியில் மீன் பிடிக்க தடை வரப் போகிறது. இது தவிர விவசாயத்திற்கு போதுமான நீர் வழங்க தடுமாறும் பேச்சிப்பாறை அணையில் இருந்து கணிசமான நீர் கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு திருப்பிவிடப்படும். இவையனைத்திற்கும் மேலாக கூடன்குளம் அணுமின் நிலையம் செயல் பட்டபின் ஏற்படும் உலை எரிபொருள் மீண்டும் சோவியத் நாட்டிற்கு கொண்டு செல்லப்படும். அவை அணுகுண்டு தயாரிக்கப் பயன்படும்.
இவ்வாறு கதிரியக்கப் பொருளை கொண்டு செல்லும்போது வழியில் விபத்து ஏற்பட்டதுண்டு. உதாரணமாக இப்படி கதிரியக்கப் பொருளை கொண்டு சென்ற கலன் விரிசலுக்குள்ளாகி கதிரியக்கப் பொருள் கசிந்தது. இதனால் ஒரு தொழிலாளி இறந்தார். 8 பேர் படுகாயமுற்றனர். 6-1-88 ‘இந்து’ இதழில் இச்செய்தி வந்துள்ளது.
கூடன்குளத்தில் கட்ட இருக்கும் அணுமின் நிலைய தொழிற்நுட்பம் பொருளாதார நோக்கில் லாபமற்றவை, பாதுகாப்பு தன்மை அற்றவை, இத்தொழில் நுட்பத்தில் செயல்பட்டு வரும் அணுமின் நிலையங்களில் பாதுகாப்பு மிகவும் மோசம். இவ்வகை அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட விபத்துகளை அரசுகள் மக்களுக்கு தெரியாமல் மறைத்திருக்கின்றன.

நமது கோரிக்கைகள்:-
1. செர்னோபிள் விபத்திற்குப் பிறகு பல நாடுகள் முடிவு செய்துள்ளது போல் நமது புதிய அணுமின் திட்டங்களை தற்காலிகமாக கிடப்பில் போட்டு நமது அணுசக்திக் கொள்கையை திறந்த பொதுமக்கள் விவாதத்திற்கு அனுமதித்து புதிய அணுசக்திக் கொள்கையை உருவாக்க வேண்டும். புதிய அணுசக்தி கொள்கை உருவாகும் வரை தமிழ்நாட்டில் கல்பாக்கம் அணுமின் நிலையம் செயல்படுவதை நிறுத்தி வைக்க வேண்டும். கூடன்குளம் அணுமின் திட்டத்தை கிடப்பில் போட வேண்டும்.
2. கல்பாக்கம் அணுசக்தி நிலையத்தில் பெரும் விபத்து ஏற்பட்டால் (செர்னோபிள் விபத்தில் 100 கி.மீ. வரை இருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்) சென்னை, செங்கற்பட்டு உள்ளிட்ட அருகாமை நகர கிராமப்பகுதி மக்களை வெளியேற்றவும், பாதுகாக்கவும் உடனே அரசு செயல்திட்டம் தயாரித்து மக்களைப் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
3. கதிரியக்க கசிவு விபத்துகளை அறிய அரசை மட்டுமே நம்பியுள்ள நிலை மாற, சமூக சேவை அமைப்புகளும் கதிரியக்க உணர் கருவிகள் பெற்று கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
4. தென் தமிழ்நாட்டின் தொழில் வியாபார வளர்ச்சிக்கு உண்மையிலேயே மத்திய அரசுக்கு அக்கறை இருக்குமானால், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சேதுசமுத்திர திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். கரூர்-தூத்துக்குடி அகல ரயில் பாதை உடனே முடிக்க போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
5. விரயமாகி வரும் பம்பாய் எரிவாயுவை குழாய் மூலம் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரும் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்.
இதுவரை இந்தியாவில் அமெரிக்கா சார்பு கூட்டில் அணுசக்தி நிலையங்கள் கட்டப்பட்டன. இப்போது சோவியத் சார்பு போக்கு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி அருகே கட்ட திட்டமிடப்பட்டுள்ள பெரிய அணுசக்தி நிலையம் சோவியத் நாட்டு (ரசியா) கூட்டில் உருவாகிவிட்டது. எனவே அமெரிக்கா சார்பு இயக்கங்களும், நபர்களும் அணுசக்தி மோக எதிர்ப்பில் தீவிர பங்கேற்றுள்ளனர். இராணுவத்திற்கு அடுத்து மக்கள் பரிசீலனைக்கு வராமல், கோடி கணக்கில் கொள்ளையடிக்க ஏதுவான துறை அணுசக்தி துறையாகும். எனவே இந்தக் கொள்ளையில் பங்கு இன்றி ஏமாந்த நபர்களும் அணுசக்தி மோக எதிர்ப்பில் தீவிரமாக ஈடுபடலாம். சர்வதேச அரங்கில் அமெரிக்க-சோவியத் நாடு அரசுகளுக்கு இடையில் ஏற்பட்டு வரும் நெருக்கம் காரணமாக இந்த எதிர்ப்புகள் முடங்குவதற்கு வாய்ப்பு உண்டு. கொள்ளையில் பங்கு கிடைக்காததால் எதிர்ப்பவர்களுக்கு எலும்பு துண்டுகள் கிடைப்பதனாலும் இந்த எதிர்ப்புகள் முடங்குவதற்கு வாய்ப்பு உண்டு. இந்த நபர்கள் அணுசக்தி எதிர்ப்பு முயற்சியில் முன்னணி இடத்திற்கு வரவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அப்படி எச்சரிக்கையாக இருந்தால்தான் அணுசக்தி எதிர்ப்பு முயற்சியை பாய்ப்பன-இந்திய தேசிய-பன்னாட்டு கூட்டு சதியில் சிக்காமல் பாதுகாக்க முடியும். அணுசக்தி துறை தலைமை பீடம் பார்ப்பன ஆதிக்கத்தில் இருப்பதைப் பார்த்தோம். அணுசக்தி திட்டங்களால் வியாபார லாபம் பெற்று வருபவர்கள் ‘இந்திய தேசிய முதலாளி-பன்னாட்டுக் கூட்டுச் சக்திகள் அவர், அணுமின் நிலைய எதிர்ப்பு என்பதனை டெல்லி ஆளும் பார்ப்பன- ‘இந்திய’ தேசிய முதலாளி பன்னாட்டுக் கூட்டு கொள்கைக்கு எதிரான ஒன்றாக உருவாக்கி மக்கள் சக்தியை ஒன்று திரட்டுவோம்.











06 டிசம்பர் 2011


ஈரோடு என்ற பதிவேடு ...... !

ஈரோடு என்ற பதிவேடு......

பசு.கவுதமன்,


தமிழ்நாட்டின் பதிப்புத் துறையில் ஈரோட்டிற்கென்று ஓர் தனியிடம் உண்டு. ஆம், தமிழர்களின் - தமிழ்நாட்டின் சமூக, அரசியல் தளங்களில் ஆழமாகவும், அகலமாகவும் உழுது பதிந்த ‘குடிஅரசு’ தந்தை பெரியாரால் ஈரோட்டில்தான் விதைக்கப்பட்டது. ‘குடிஅரசை’ ஒழிக்கச் செய்த முயற்சியால் ‘புரட்சி’யும், ‘ரிவோல்ட்’ ம் அங்கிருந்துதான் புறப்பட்டது.

பெரியாரின் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் பல்வேறு பதிப்பகங்கள் பதிவு செய்தி ருப்பினும் அவற்றுள் திராவிடன் பதிப்பகம், பகுத்தறிவு வெளியீடு, உண்மைவிளக்கப் பதிப்பகம், பெரியார் தன்மானப் பிரச்சார நிலையத்தார், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் போன்றவைகள் சென்னையிலிருந்தும், திருச்சியிலிருந்தும் வெளியிட் டுருப்பினும் ஈரோட்டிலிருந்து குடிஅரசு பதிப்பகம், தமிழன் அச்சகம், பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட் ஆகியவற்றை முதன்மையானதாகச் சொல்லலாம்.

அதிலும் குறிப்பாக ஈரோடு, பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட் சிறப்பிற்குரியது. இந்தியத் துணைக்கண்டத்தில் ‘முதன்முறையாக’ என்றுகூட சொல்லலாம். ஆம், 1933 களில் பொதுமக்களிடமிருந்து பங்குதொகைப் பெறப்பட்டு அவர்களை பங்குதாரர்களாக்கி நடத்தப்பட்ட நிறுவனம் இதுதான். ( வேறு இருப்பின் தோழர்கள் பதிவு செய்யலாம்.) இந்திய விடுதலைக்குப் பின் கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் இவ்வாறான பதிப்ப கங்கள் செயல்பட்ட பதிவுகள் உண்டு. ஆனால் இதற்கும் தந்தை பெரியார் தான் முன்னோடி.

சாத்தான்குளம் அ. இராகவன் அவர்களை காரியதரிசியாகக் கொண்டு, “ குடிஅரசில் ஏற்கனவே அறிவித்திருந்தபடி நாடெங்கும் மூடநம்பிக்கையையோட்டி பகுத்தறிவுக் கொள்கையை பரப்பும் நோக்கத்துடன் ஆங்கிலம், தமிழ் முதலிய பலமொழிகளில் மூலமாய் பத்திரிக்கைகள் நூற்கள் முதலியன வெளிப்படுத்தியும், மொழிபெயர்ப்பு நூற்கள் பல வெளியிட விரும்பியும் பகுத்தறிவு இயக்கத்தை ஆதரிக்கும் தோழர்களை டைரக்டர்களாகக் கொண்டு பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் 13.12.1932ல் லிமிட்டெட் கம்பெனியாக ரிஜிஸ்டர் செய்யப்பட்டு...” ( குடிஅரசு 08.01.1933 ) ,

20.01.1933, தோழர் வி.வி.சி.ஆர். முருகேசமுதலியார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற, பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட் திறப்புவிழாவில் தோழர்கள் டி.எம்.நரசிம்மாச்சாரி, பி,ஏ.பி.எல்; எஸ்.மீனாட்சிசுந்தரம் பி.ஏ.எல்.டி; கேசவலால்; ஈ.வெ.ராமாசாமி ஆகியோர்கள் ’பகுத்தறிவு’ என்பது பற்றி பேசினார்கள்.(குடி அரசு22.01.1933) . இது ஏன் துவக்கப்பட்டது என்பது குறித்து ‘சந்தேக நிவர்த்தி ‘ என்று 12.02.1933 குடிஅரசில் எழுதுகின்றார்,

“ பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் என்பதாக ஒரு கம்பெனியை பங்கு ஒன்றுக்கு 10 ரூவீதம் 3000 பங்குகள் கொண்ட 30000ரூ மூலதனத்துடன் லிமிட்டெட் கம்பெனியாக நடத்த ஏற்பாடு செய்து துவக்கவிழாவும் செய்தாகிவிட்டது. இதுவரை 250 பங்குதாரர்கள் வரை சேர்ந்து இருக்கிறார்கள். இக்கழகத்திற்கு தோழர் அ. ராகவன் அவர்கள் நிரந்த அதாவது ஆயுள் காரியதரிசியாய் இருக்கிறார். கழகத்தின் முக்கிய நோக்கம் பகுத்தறிவு வளர்சியை ஆதாரமாகக் கொண்ட ஆதாரங்கள், புத்தகங்கள் வெளியிடுவதே ஆகும். இந்தப்படியாக ஒரு தனி ஸ்தாபனமாய் அதாவது சுயமரியாதை இயக்கத்துடன் பிணைந்ததாய் இல்லாமல் தனித்து நின்று நடைபெற தக்கதாய் நடத்தப்பட என்ன அவசியம் என்று வினவலாம். இவ்வினாவுக்கு விடை தோழர் அ. ராகவனால் சுமார் 4,5 மாதங் களுக்கு முன்னதாகவே குடிஅரசு பத்திரிக்கையில் வெளியிடப்பட்டிருக்கின்றது. என்றாலும், இப்போதும் சில தோழர்களுக்கு இது விஷயத்தை அறிய ஆவல் இருப்பதாய் காணப்படுகிறது. .............
....... அதாவது சுயமரியாதை இயக்கமும், அது சம்பந்தமாய் நடைபெறும் பிரசாரமும், வெளியிடப்படும் பிரசுரங்களும் இது சமயம் பலருக்கு அரசியல் சம்பந்தமுடையதாகக் காணப்படுகின்றதுடன், அரசியல் அடக்குமுறைக்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆதலால் அவ்வித சந்தேகமும் பயமும் இல்லாமல் இருப்பதற்கு அதாவது பகுத்தறிவு விளக்கம் என்பது யாவருக்கும் பொதுவானது என்பதோடு, மக்களுக்குப் பகுத்தறிவை ஏற்படுத்த யாவரும் பிரவேசித்துத் தங்களால் கூடிய உதவி செய்வதற்குத் தகுதியுடையதாயும், அரசாங்க அதிருப்திக்கு ஆளாகாததாயும் இருக்கக் கூடியதான ஒரு தனிப்பட்ட ஸ்தாபனம் இருக்குமானால் அது என்றும் நிலைத் திருக்கக் கூடும் என்கின்ற எண்ணத்தின் மீதும்...........
....... அரசியல் சம்மந்தத்திலிருந்து பூரணமாய் பிரிந்து நிற்பதற்கும், லாப,நஷ்டப் பொறுப்பு வரையறுப்பதற்கும் ஆகவே இக்கழகம் ஏற்பாடு செய்யப்பட்டு ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கின்றது என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.” என்ற விளக்கத் துடன் துவக்கப்பட்ட இக்கழகத்தின் முதல் வெளியீடுதான், தந்தை பெரியார் அவர்களின் அரிய படப்பான, ”பெண் ஏன் அடிமையானாள்?” ஆகும். தோழர் அ. இராகவன் அவர்கள் உள்நாட்டிலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் பயணம் மேற்கொண்டு பங்குதாரர்களை சேர்ப்பதுடன், லண்டன் பகுத்தறிவுக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ரஸ்ஸல், இங்கர்சால், லெனின், ஜின் மெஸ்லியர், வால்டையர் போன்றவர்களின் படைப்புகளை தோழர்கள் ஈ.வெ.ரா, எஸ். இராமநாதன், ப.ஜீவானந்தம், மா.சிங்காரவேலு, குத்தூசிகுருசாமி போன்ற பலரின் மொழிபெயர்ப்பில் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கியுள்ளார்.
தோழர் மா.சிங்காரவேலரின் ,”மெய்ஞ்ஞானமுறையும் – மூடநம்பிக்கையும்” போன்ற படைப்புகளையும் பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது. எண்ணற்ற அரிய மொழிபெயர்ப்பு நூல்களை பதிப்பித்த இக் கழகம் தொடர்ந்து செயல்படவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

நன்றி : உங்கள் நூலகம் – ஆகஸ்ட்,2011