08 ஆகஸ்ட் 2015




குடிதாங்கிகள்....
-      பசு.கவுதமன்.


மிழ்நாட்டின் இன்றைய தலைப்பு செய்திகளுக்கு ‘ விஷயதானம் ’ செய்து கொண்டிருப் பவர்களில் முக்கியமானவர்கள், குறிப்பிடத்தக்கவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர், இராமதாஸ் அவர்களும், மற்றும் அவரது மகனும், 2016ஆம் ஆண்டின் அறிவிக்கப்பட்ட முதலமைச்சர் வேட்பாளருமான மருத்துவர், அன்புமணி அவர்களும், ( இப்ப அந்த வடையும் போச்சு ) அவர்களைப் போன்ற அந்தக் கட்சியைச் சார்ந்த ‘ அறிவார்ந்த ’ பலரும், அவர்களோடு திராவிட ஒவ்வாமையால் கடுமையான பாதிப்புக்கு ஆளான தமிழ்தேசிய  ‘தம்ளர்களும்’ தான்! 
                                                
இவர்களுக்கு இருக்கின்ற பலமே - பொதுவாக அரசியல் ‘செய்பவர்களுக்கு’ - இருக்கின்ற பலமே, தமிழர்களின் இரண்டு தனிப்பட்ட குணங்கள்தான். அவையாதெனில், முதலாவது, எதையும் உடனடியாக, சுலபத்தில் மறந்துவிடுகின்ற பொதுப்புத்தி. அது நல்லதானாலும், கெட்டதானாலும் பொதுவான மறதி. ஆனால் தற்போது தமிழர்கள் கொஞ்சம் கொஞ்ச மாக அந்த ‘ அம்னீஷியா ’ விலிருந்து விடுபட்டு நடுவிலே கொஞ்சம் நினைக்கத் துவங்கி யுள்ளார்கள் என்பது ஆறுதல் தரக்கூடிய விசயம்.
இரண்டாவது, ‘பழக்கப்படுத்திக் கொள்வது’ என்பதைப் வழக்கமாக்கிக் கொண்டு பழகிக்கொள்வது. எந்த ஒன்றையும்"இல்லையா? சரிவிடு, பாத்துக்கலாம்"என்று பழகிக் கொள்கின்ற மனோபாவம். இந்த இரண்டு குணநலன்களுமேதான், தமிழ்ச் சமூகத்தின் சகலதளங்களிலும் அரசியல் ‘’ பன்னுகிறவர்களுக்கு ’’ பயன்படுகின்றது என்றால்  அது மிகையில்லை. இந்த பொதுபுத்திகளை மறக்காமல், அதன் அடிப்படையில் இதனை அசை போடவேண்டும்.






தோழர் திருமாவளவன் அவர்கள், தந்தி தொலைக்காட்சி செவ்வி ஒன்றில்  (30.12.2012) ஒரு செய்தியினை பதிவு செய்தார். மரு. இராமதாஸ் அவர்களுக்கு “ தமிழ் குடிதாங்கி ” என்ற பட்டத்தினை வழங்கியது தொடர்பாக, ஆனால் அதில் கூடுதலாக ஒரு செய்தியினை சொன்னார், “ வன்னிய பெண்கள் அவர் மீது மண்ணை வாறி இறைத்த பிறகும் எங்கள் தோழர்களுடன் நின்றார் ” என்பதாக! அந்த சம்பவம் உண்மைதான் ஆனால் அங்கே பெண்கள் கைகளில் இருந்தது மண்ணல்ல – தரையைக் கூட்டுகின்ற “ “விளக்கமாறு ” என்பதுதான் உண்மை! அதுமட்டுமல்ல, அவர்கள் மருத்துவரை நேருக்கு நேர் பேசியது எழுதமுடியாதது. ஆனாலும் அது பின்னால் வரும்.  அங்கே நடந்தது என்ன? குடிதாங்கிக்கும் மருத்துவர் ராமதாசுக்கும் என்ன சம்பந்தம்? அதுமட்டுமல்ல, அவருடைய பாதுகாப்பு கருதி தோழர்கள் அவரை, அவர்களுடன் வைத்துக்கொண்டனர். சொந்த சாதி துரத்தி விட்டது என்பதும், காலனி மக்கள் அவரை இங்கிருந்து போகச் சொல்லுங்கள் என்றதும், காவல்துறை இவர் இருந்தால் சட்டம் ஒழுங்கு கெடும். அவரை வெளியேற்றுங்கள் என்று சொன்னதும் உண்மை, உண்மை. பட்டம் வழங்கிய தோழர் திருமாவுக்கும், குடிதாங்கிக்கும் என்ன தொடர்பு? எப்போது தொடர்பு? தோழர் திருமா எப்போது குடிதாங்கிக்கு வந்தார்? அவர் ஏன் அந்தத் தமிழ் குடிதாங்கி பட்டத்தை மருத்துவர் ராமதாசுக்கு வழங்கினார்?  உண்மையில் யார் “ தமிழ் குடிதாங்கி ” ? என்பதை “ நோண்டி நொங்கெடுத்து ” சற்றேறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பின்னால்  இங்கே பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏன்? குடிதாங்கி நிகழ்வில்,
குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின்,
நீலப்புலிகளின் நிறுவனர் உமர்பாரூக் என்ற டி.எம்.மணி
என்ற ஆளுமைகளின் செயல்பாடுகளும், களப்பணியும், பங்களிப்பும்
இதுவரை பதிவு செய்யப்படவில்லை. எனவேதான் நமக்குத் தெரியாத, வெளிவராத செய்திகள், மறைக்கப்பட்ட உண்மைகளை பதிவு செய்ய வேண்டிய வரலாற்று அவசியம் ஏற்பட்டது.
இது என்னுடைய முன்னுரையின் துவக்கம் மட்டுமே!
விரைவில் நூலாக…,
கீழைத்தஞ்சை மாவட்டத்தின் விவசாயிகளின் வீரெழுச்சியில் பெரியாரியக்கப் பங்களிப்பு என்ன என்பதை பதிவு செய்த ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும் போல…,
குடிதாங்கியில் பெரியாரிக்கப் போராளிகளின் பங்களிப்பு என்ன?
விரைவில் தரவுகளாக…,
அதிலிருந்து சில…,
தோழர் செல்வராஜ் (குடிதாங்கி வழக்கின் இரண்டாவது குற்றவாளி – A2 )
சொல்கின்றார், 


" நேரடியா ராமதாஸ் வீட்லே போய் பேசியவன் நான். புதுசா காலனிக்காரங்க பிரச்ச னைய கிளப்புறாங்க. FMD ஊர் மேப் எடுத்துக்கிட்டுப் போனேன். விரங்களைச் சொல்லி இது அவுங்க இடம், நம்ம இடம் எங்க இருக்குன்னு விபரமா பேசினேன். அவர் எதுவும் சரியா பேசல,
எங்க தோட்டத்துக்குப் போனிங்களா?
தோட்டம் ஏது – அப்பஏது தோட்டம்!
அப்ப தைலாபுரம் தோட்டமில்லையா?
அப்ப ஏது தோட்டம். திண்டிவனம் வீட்ல உட்கார்ந்து வராண்டாவில் -  இதுபோல ஒரு பெஞ்சிலதான் உட்கார்ந்து பேசினேன். இதேபோல ஒரு வீடு. அதிலே ஒரு பக்கம் ஆஸ்பத்திரி. வீட்டுக்கு வந்திடுங்கன்னாரு பக்கத்தில் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்குப் போனோம்.
பண்ருட்டியார் சென்னையிலிருந்து வந்துகிட்டு இருக்கார். வந்துடுவாருன்னு காலை 10 ½ வரைக்கும் காக்க வச்சிட்டாரு. அவரு வரல, நாங்க விடிகாலை 5 ½ க்கு அவரு ஆஸ்பத் திரிக்குப் போயிட்டோம். ராமச்சந்திரன் வரல நாங்க திரும்பிட்டோம்.
ஒருவாரம் கழிச்சி சோழபுரம் மீட்டிங்கு இவர் – ராமதாஸ் – வந்துருக்காரு. வந்தவரு நேரா அவங்கத் தெருவுல ( காலனி தெரு ) நைட் 11 மணி வாக்கில போய் அவுங்ககிட்ட, எந்தப் பிரச்சனையும் இருக்கப்படாது. எதுவானாலும் எனக்கு போன் பண்ணுங்க நா வந்து தூக்கிட்டு வற்றேன்னு சொல்லிட்டுப் போய்ட்டாரு…. "
இன்னும் அவர் தொடர்ந்து பேசுவார்.


இப்போது தோழர், அண்ணன் குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின்,
" 120 வன்னியர் வீடுகள், 200 காலனி வீடுகள். முதலில் 120 வீடுகளிலும் பேசுகிறேன். ஆண்கள் ஒத்துக்கொள்கின்றார்கள். பெண்கள் ஒத்துக்கொள்ளவில்லை. எடுத்த உடன் முரண்படாமல் அடிக்கடி பேசத் தொடங்கினேன். ஒரு கட்டத்தில் பெண்களுக்கும் நம்பிக்கை வந்தது. அண்ணன் சொல்றாருன்னு சிலபேரும், தம்பி சொல்லுதுன்னு சிலபேரும் ஏத்துகிற கருத்து உடன்பாடு வந்துடிச்சி. நான் அவங்களுக்கு ஏற்கனவே இருக்கிற நெருக்கடியை பயன்படுத்திக் கொள்கிறேன்.
என்ன நெருக்கடி?
அவங்க கொடுத்த வழக்கிலே இவங்க ( வன்னியர்கள் ) 80 பேர் மேல வழக்கு,  அவங்க
(சேரித் தோழர்கள்) 30 பேர் மேல வழக்கு. ஆறு மாசம் இவங்ககிட்டேயும், அவங்க கிட்டேயும் தொடர்ந்து பேசுகிறேன். பி.சி.ஆர் கேஸ். கேஸ் நெருக்கடி முக்கிய காரணம். 15 நாளைக்கு ஒருமுறை தஞ்சாவூர் செஷன்ஸ் கோர்ட்ல போய் கையெழுத்துப் போடனும். ஒரு வருசமா இப்படி கையெழுத்துப் போட்டுக்கிட்டு இருக்காங்க. இந்த நெருக்கடியை நான் பயன்படுத்தினேன். தஞ்சாவூர் செஷன்ஸ் கோர்ட்லே போய் அவங்க கூட நின்னு கிட்டு நீ 80 பேரு 15 நாளைக்கு ஒருதடவ வற்றதுக்கு என்னாச்சி, நீ 30 பேரு உனக்கு என்னாச்சி? என்னாய்யா இது, உங்களுக்கு இது அசிங்கமாப்படலயா? இப்படிப் பேசிப் பேசியே இரண்டுபேரையும் ஒன்னா வச்சி காபி, டீ குடிக்க வச்சி , இப்படியான நடவடிக்கை ஆரம்பிச்ச பிறகுதான் அவர்களிடம் மாற்றம் ஏற்பட்டது. அதற்குப் பிறகு அவர்களை நம்முடைய இடத்திற்கு வரச்சொல்லி பேச ஆரம்பிச்சேன். அப்பறம் நாம மட்டும் இதிலே நின்னு பேசிடக்கூடாது என்று, டி.எம். மணியை உள்ளே கொண்டாந்து – அவர்கிட்டே நானே நேர்ல போய் சொன்னேன். அவர் உடனே, அண்ணே நான் வந்துடு றேன்னு சொல்ல அவரைக் கூட்டிக்கொண்டு முதல்ல வன்னியத் தெருவுக்குப் போய்ட்டு, இவங்கதெருவுக்கு வந்து ஒரு தேதிய FIX பன்னினோம்….."
அண்ணனும் தொடர்ந்து பேசுவார்.
இனி, அண்மையில் மறைந்த தோழர் டி.எம்.மணி…,


" 80 வன்னியர்களை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் தள்ளிவிட்டு குடிதாங்கி சுடுகாட்டுச் சாலைப் பிரச்சனைக்கு முடிவு கண்ட பிறகு, சட்ட மன்ற உறுப்பினர்கள் குடந்தை ராமநாதன், போளூர் வரதன் போன்றவர்கள் சட்டமன்றத் தில் பா.ம.கவின் முகத்திரையை கிழித்தபிறகு, முதலமைச்சர் ஜெயலலிதா, பொதுச்சாலை வழியே பிணத்தை எடுத்துச்சென்று அடக்கம் செய்ய உத்தரவிட்ட பிறகு, அரசியல் லாபம் கருதி பிரச்சனையை தான் முடித்ததாகக் காட்ட வேண்டும் என்ற நோக்கோடுதான் குடிதாங்கி வருகிறார் டாக்டர் ராமதாஸ். வன்னியர் சமூகப் பெண்கள் ராமதாசிடம் உங்கள் கட்சிக்காரர்கள்தானே மறித்தார்கள். இப்போது நீங்களே காட்டிக் கொடுப்பது போல சேரி மக்கள் பக்கம் சேருகிறீர்களே என்று கடுமையாக திட்டி, சேரிமக்களோடு அவர் வந்தால் மீண்டும் சாலையை மறிப்போம் என்றார்கள். நான்காண்டு காலம் போராடி இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகண்ட எங்கள் மக்களும் ராமதாஸ் வருகையை விரும்ப வில்லை. DSP கந்தசாமியும், RTO பழனிவேலுவும் நீங்க இங்க இருக்காதீங்க, கலவரம் வரும்  போயிடுங்க என்று கட்டாயப்படுத்துகிறார்கள். நிலைமை மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது. கும்பகோணத்திற்கு அண்ணன் ஆர்.பி.எஸ். ஸ்டாலினோடு போனில் தொடர்பு கொள்கிறேன்…… "

  
நூலில் இன்னும் பேசுவார் மறைந்தத் தோழர் டி.எம்.மணி என்ற உமர்பாரூக்,
விரைவில் தமிழ் குடிதாங்கிகள்….!
                                                    அண்மையில் இந்த நூல் குறித்த செய்திகளை  பகிர்ந்து கொண்டபோது,                               



26 மார்ச் 2015

திராவிடர் - பெரியார் ஒவ்வாமை


 திராவிடர் - பெரியார் ஒவ்வாமை - இது ஒரு தொடர் கட்டுரை.

ண்மைக் காலமாகவே, கடுமையான “ திராவிட ஒவ்வாமை ” க்கு ஆட்பட்டவர்களால்,
“ தமிழ் தேசிய  ரசிகர்களால் ”, “அவர்கள் மட்டுமே தமிழர்கள் ஆன, புதிய பச்சைத்துண்டு நம் ஆழ்வார்களால் ” அதிலும் குறிப்பாக , திருமிகு ஜெகத் கஸ்பர் அவர்களின் “ ம ” போன “சங்கம்”. அதில் தோழர்கள் பேரா. சுபவீ – VS – பெமவும் “திராவிடமா- தமிழ்தேசியமா ” என்று பேசிய அல்லது விவாதம் என்று சொல்லப்பட்ட நிகழ்வுக்குப் பின்னால் வலைப்பூக்களிலும், முகநூல்களிலும் மயிர்க்கூச்செரியும் விவாதங்கள், வியாக்கியானங்கள், படிக்கும்போதே கண்கள் கூசிய தமிழின் உச்சபட்ச நாகரீகமான கெட்ட வார்த்தைகளை உள்ளடக்கி - ஒருவேளை அவர்கள் பெருமாள் முருகனின்,
“ கெட்டவார்த்தை பேசுங்கள் ” நூலின் அட்டையை மட்டும் படித்தவர்கள் போல – எல்லோரும் எழுதி, அது இப்போது துணுக்கு அளவுக்கு சுருங்கி, ஆனாலும் அந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை ! அது போகட்டும்,
 நான் என் செய்திக்கு வருகின்றேன். 
 சில தினங்களுக்கு முன் என்  செல்லப் பேத்தி மகிழின் இரண்டு படங்களைப் பகிர்ந் திருந்தேன். பல தோழமை உள்ளங்கள் வாழ்த்து சொல்லி பதிவிட்டிருந்தனர். பலர்  தொடர்ச்சியாக அது தொடர்பான சில செய்திகளை என்னோடு பகிர்ந்து கொண்டனர். அவர்கள் எல்லோருக்கும் என் இனிய நன்றியினையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதுடன் இது தொடர்பாக எனக்குள் எழுந்த சிந்தனைகளை இங்கே பதிவிடு கின்றேன்.
காரணம், ‘பலருக்கு’ அதுவே பதிலாக அமையக் கூடும் என்பதால் !


இந்தப் புகைப்படங்களில் ஒன்று எங்கள் மருமகன் அன்பிற்குரிய ஜே. கிறிஸ்டோபர் டொமினிக். மற்றொன்று எங்கள் மகள் அன்பிற்குரிய அ.க. தென்றல். 08.05.2011 அன்று இவர்களது வாழ்க்கை ஒப்பந்த நிகழ்வு, சாதி மறுத்து , மதம் மறுத்து  நடைபெற்றது. ( இது தென்றலின் தந்தை வழியே மூன்றாவது – தாய் வழியே நான்காவது சாதி மறுப்பு வாழ்க்கை ஒப்பந்த நிகழ்வு. )  இவர்களது மகள், எங்கள் செல்லப் பேத்தி தெ.கி.மகிழ் – 14.06.2014 அன்று பிறந்தாள்.


அன்பான தோழர்களே,  மகிழ் என்ன சாதி ?
கொஞ்சம் சில, பல ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வோம்,
இங்கே தேவை கருதி சாதி அல்லது வகுப்புப் பெயர்களை பதிவிட வேண்டியுள்ளது, மன்னிக்கவும்.
என்னுடைய தந்தையார், தஞ்சை ந. பசுபதி அவர்கள், த/பெ.நடேச ஆச்சாரியார், விஸ்வ கர்மாக்கள் என்று சொல்லப்படும் கம்மாளர் வகுப்பை அல்லது சாதியைச் சார்ந்தவர். எனது தாயார் ப. பத்மா அவர்கள், த/பெ.பக்கிரிசாமிப் பத்தர் அதே சாதியை அல்லது வகுப்பைச் சார்ந்தவர். என்றாலும் அவர்கள் தூரத்து உறவினர்கள் கூட கிடையாது. எனது தந்தையார் குடும்பத்தில் அவர் மட்டுமே சுயமரியாதை இயக்கம் சார்ந்தவர். ஆனால், என் தாயார் குடும்பத்தினர் பெரும்பாலும் சுயமரியாதை இயக்கம் சார்ந்தவர்கள். வாழ்க்கை இணையர்கள் ஆயினர். 11.02.1950 இல் நடைபெற்ற அந்த வாழ்க்கை ஒப்பந்த நிகழ்வில் தாலிகட்டும் சம்பிரதாயம் கிடையாது. இதன் காரணமாகவே தந்தையார் வழி உறவினர்கள் கோபித்துக்கொண்டு போய்விட்டனராம். இந்த செய்திகள் அவரது பேட்டி யாக 15.10.2000 தேதியிட்ட விடுதலை நாளிதழில் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போதே, 50களிலேயே ‘ நோ ’ தாலி – தாலி காப்பாளர்களே ! 
அப்படியே என்னுடைய துணைவியார் அ.அறிவுச்செல்வி பக்கம் வருவோம்.

   எனது தந்தையார் தஞ்சை ந.பசுபதி மற்றும் எனது மாமனார் மண்ணச்சநல்லூர்                                                                                                                                            ச.க.அரங்கராசன்
அவருடைய தந்தையார், மண்ணச்சநல்லூர் ச.க.அரங்கராசன், த/பெ. கருப்பண்ணப் பிள்ளை. சோழிய வெள்ளாளர் வகுப்பை அல்லது சாதியைச் சார்ந்தவர். அவரது தாயார், அ.அனந்தம்மாள், த/பெ.அய்யம்பெருமாள். (பேட்டவாய்த்தலை) நாடார் வகுப்பை அல்லது சாதியைச் சார்ந்தவர். இவர்கள் இருவரும் வாழ்க்கை இணையராகினர், எப்படி?
தந்தை பெரியாரவர்களின் அறைகூவலை ஏற்று, 1957களில் இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு, சாதியை – வகுப்பைக் காப்பாற்றும் இந்திய அரசியல் சட்டத்தினைக் கொளுத்தி, இரண்டாண்டுகள் கடுங்காவல் தண்டனை ஏற்று திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு வருகின்றார் மண்ணச்சநல்லூர் ச.க.அரங்கராசன். அவரைப் போலவே பேட்டவாய்த்தலையிலிருந்து, அ.கணபதி அவர்களும், இந்திய அரசியல் சட்டத்தைக் கொளுத்திவிட்டு இரண்டாண்டுகள் கடுங்காவல் தண்டனை ஏற்று திருச்சி மத்தியசிறைக்கு வருகின்றார். (தோழர் அ.கணபதி, பின்னாளில் பேட்ட வாய்த்தலை ஊராட்சி மன்ற பெருந்தலைவராக இருந்தவர்.) சிறையில் தோழர்கள் ச.க.அரங்கராசனும், அ.கணபதியும் நண்பர்களாகி, சாதி ஒழிப்பை பேச்சோடு நிறுத்தாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற விவாதம் வந்தபோது, தோழர் கணபதி, என் தங்கையை மணம் செய்துகொள்ள சம்மதமா? என்று கேட்க, சம்மதித்தத் தோழர் அரங்கராசன் சிறையிலிருந்து வெளிவந்த பின் 08.10.1961 இல் அ.அனந்தம்மாளை வாழ்க்கை இணையராக ஏற்றுக் கொள்கின்றார். அவர்களது மூத்த மகள்தான் – எனது துணைவியார் அன்பிற்குரிய அ. அறிவுச் செல்வி அவர்கள்.
அன்பான தோழர்களே, அ. அறிவுச்செல்வி என்ன சாதி?
சரி, எங்களுடைய மகள் அ.க.தென்றல் என்ன சாதி?
அதுமட்டுமல்ல,
என்னுடைய சகோதரியின் வாழ்க்கை இணையர் வன்னியர் வகுப்பை அல்லது சாதியைச் சார்ந்தவர். அவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உண்டு.
தோழர்களே, அவர்கள் இருவரும் என்ன சாதி?
என் சகோதரி மகளின் வாழ்க்கை இணையர், கள்ளர் சாதியை அல்லது வகுப்பைச் சார்ந்த வர். அவர்களது மகள் யாழினி.
அன்பார்ந்த தோழர்களே, யாழினி என்ன சாதி?
என் துணைவியாரின் சகோதரியின் துணைவர்  உடையார் வகுப்பை அல்லது சாதியைச் சார்ந்தவர். அவர்களது மகன் அ.இர. சூரியஒளி.
அன்பார்ந்த தோழர்களே, அ.இர. சூரியஒளி என்ன சாதி?
எங்களுடைய இரண்டு குடும்பங்களிலும் ஒரே சாதிக்குள் யாருக்கும் “ திருமணம் ” நடைபெறவில்லை. “இப்படித்தான் என்று”  நாங்கள் யாரும் திட்டமிட்டுக் கொள்ள வில்லை. அதற்கான மனோபாவமும், கருத்தாக்கமும் எங்களுக்குள் இயல்பாகவே இருந்தது. நாங்கள் மட்டுமல்ல. அண்மையில் நடைபெற்ற தோழர் அரசெழிலன் மகன் வாழ்க்கை ஒப்பந்த நிகழ்வுக்குப் பின்னும், இது தொடரும்தான். இப்படியாக எண்ணற்ற குடும்பங்கள் தமிழ்நாட்டில் – தமிழ்நாட்டில் மட்டுமே உண்டு. இது எப்படி? எதனால் சாத்தியப்பட்டது?
ஆம், தோழர்களே,
இதை சாதித்தது  திராவிடர் இயக்கம் !
இதைத்தான் தந்தை பெரியார் சாதித்தார் !
2500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தி சொன்ன புத்தனது இயக்கம் பார்ப்பனர்களால் ஒழிக்கப் பட்டதே, ஏன்? பார்ப்பனர்கள் தங்களது வாழ்வாதாரமான, ஆளுமையான சாதிப் படிநிலையைக் காப்பாற்றிக் கொண்டால்தான் அவர்களால் மனுதர்மப்படிக்  கோலோச்ச முடியும் என்பதால் புத்தன் ‘ இந்தியாவுக்கு வெளியே ’ அனுப்பப்பட்டான்.
சித்தர்களால் அவர்களது பாடல்களைத் தாண்டி வேறு என்ன சாதிக்க முடிந்தது?
திருவள்ளுவரால், வள்ளுவத்தை வாழ்வியல் நெறியாக, இயக்கமாகக் கட்டமைக்க முடிந் ததா? இந்தத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் திருக்குறளை  “ திருக்குறளாக ” அறிமுகப் படுத்தவே ஒரு பெரியார்தான் தேவைப்பட்டார்.
உங்கள் இலக்கியக் கர்த்தாக்களால் எதை இயக்கமாக்க முடிந்தது, பக்தியைத் தவிர ?
முக்திநிலையில் பெரும் பேறு பெற பக்தியை இயக்கமாக்கி, எங்கள் தாயை, சசோதரியை, மகளை  பார்ப்பனர்களுக்கு  “ தேவடியாள் ” என்பதை உறுதி செய்ததைத் தவிர வேறு என்ன செய்து சாதித்தார்கள் புலவர்களும், பண்டிதர்களும், வித்துவான்களும் ?
பெரியாருக்கு முன்னே யாருமே இல்லையா ? திராவிடர் இயக்கம்தான் சாதித்ததா ?
‘ தமிழ் தேசியம் ’ பேரிரைச்சலாய்க் கேட்கிறது.
முன்னே பலர் விதைத்தார்கள்; பெரியாரும், திராவிடர் இயக்கமும் அறுத்துக்கொண்டது என்று ‘தமிழ் தேசியம் ’ ரொம்பவும் கோபமாகச் சொல்கிறது.
பெரியாருக்கு முன்னே பலர் இருந்தார்கள்தான், விதைத்தார்கள்தான்.
இல்லை என்று பெரியாரும் சொல்லவில்லை,
திராவிடர் இயக்கம் மட்டுமே என்று உரிமையும் கோரவில்லை !
அவர்கள் மண்ணில் விதைத்தார்கள். ஆனால், 
தண்ணீர் ஊற்றி வளர்த்தெடுக்க முடியவில்லை  !
காரணம் அவர்கள் யாரும் இயக்கமாக இல்லை. எனவே அவர்களால் இயங்க முடிய வில்லை. அவர்கள் விதைத்துவிட்டு
‘கடை விரித்தேன் கொள்வாரில்லை ’ என்று முடித்துக் கொண்டவர்கள் !
பெரியார் விதைத்தார்.  அவர் மண்ணில் விதைக்கவில்லை.
பெரியார் விதைத்தார், அவர் மக்களுக்குள் விதைத்தார்.
அதனால்தான் அவரால் இயக்கமாகக் கட்டமைக்க முடிந்தது.
எது, எதுவெல்லாம் நேர் என்று சொல்லப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்டு பொதுபுத்தி யில் ஏற்றப்பட்டதோ – அவற்றிற்கு எதிராகக் கலக்குரல் எழுப்பி அவற்றைக் கட்டுடைத் தார். எனவேதான் அவரால் புதிதாக இயக்கம் கட்டமைக்க முடிந்தது. மனிதர்களுக்கா வென்றே பெரியாரால் கட்டமைக்கப்பட்ட இயக்கம்தான், சுயமரியாதை இயக்கம்.
அதனுடைய நீட்சிதான் தற்போது  ஒவ்வாமையை ஏற்படுத்துகின்ற திராவிடர் இயக்கம் என்று வேண்டுமானாலும் நீங்கள் சொல்லிக்கொள்ளுங்கள்.
இவர்கள் சொல்கின்றார்கள், “ பெரியார் பேசியது எதிர்வினைக் கருத்துகள். எதிராகப் பேசினார், எதிராக செயல்பட்டார். அவருக்கான நேர்வகைக் கருத்தியலை அவர் உருவாக்கவில்லை “ என்று.  இந்தத் தமிழ்தேசியர்கள் எதையெல்லாம் எதிர்வினைக் கருத்துகள் என்கின்றார்களோ அதுவெல்லாம்தான் தமிழ்ச் சமூகத்திற்கான நேரான கருத்தாக்கங்கள். அதைத்தான் சென்ற பத்தியில் சொன்னேன், எதுவெல்லாம் இந்த சமூகத்திற்கு எதிரானதோ அவற்றையெல்லாம் நேர் என்று சொல்லி பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டது. அதைத்தான் பெரியார் கட்டுடைத்தார்.
பெரியார் குறித்த இந்த ஒவ்வாமை ஒன்றும் இன்றைக்குப் புதிதாய் ஏற்பட்டதல்ல. தலைவர் தந்தை பெரியார் வாழ்ந்த – அவர் காலத்திலேயே தொடங்கிவிட்டது. அவரும் கிளிப்பிள்ளைக்குச் சொல்வதைப்போல பல சந்தர்ப்பங்களில் நிறைய பதில் சொல்லியுள்ளார். அவற்றையெல்லாம் தொடர்ந்து இந்த கட்டுரையிலே மீள்பதிவு செய்கின்றேன்.
ஆம் , இது ஒரு தொடர் கட்டுரை.
இப்போதைக்கு இதனை தொடரும் என்று முடிக்கின்றேன். முடிக்கும் முன்பாக இதனைப் படிக்கும் தோழர்களுக்கு ,
இந்தக் கட்டுரையினை படித்ததன் அடிப்படையில் - நியாயமான மூன்று கேள்விகளை நீங்கள் என்னிடம் கேட்க வாய்ப்புள்ளது.
தமிழ்தேசிய ‘ தம்ளர்கள் ’ வரிக்குவரிகூட கேள்விகள் கேட்கலாம். அந்த புத்திசாலி களுக்குப் பதில் சொல்லும் சிற்றறிவும், பேரறிவும் என்னிடம் இல்லை.
அந்த மூன்று கேள்விகளை பதிவு செய்யுங்கள். பதில்களோடு கட்டுரையினை அடுத்து தொடர்கிறேன்.
தோழமையுடன்,
பசு.கவுதமன்.
                                 அய்யாவுடன் நானும் என் இளைய சகோதரி மாதரியும்.


16 மார்ச் 2015




அரசவைக் கவிஞனே.!


அரசியல் விபச்சாரத்தில் அங்கீகரிக்கப்பட்ட
பலதாரப் பாஞ்சாலியே!
பதவிப்பிச்சைக்குப்
பத்திரிக்கைத் தெருக்களில்
எழுத்துப் பாத்திரமேந்தியப் பாடகனே!

தனிப்பாடல் தொகுதிகளின் பக்கங்களைப்
பக்குவமாய்த் திருடி
சினிமா வீதிகளில் சில்லறையாக்குபவனே!
உன்,
“தேசப்பிதாக்களையே திகைக்க வைத்த
ஈரோட்டு வியப்புகள்!
எழுச்சியின் வெளிச்சங்கள்!
எங்கள் அம்மாவையா......?

விலாசம் தெரியாமல் விளையாடுபவனே,
போய் உன் “பாரதமாதாவையும்
அவள் தாத்தாவையும் கேள் ?
ஒரு காலப்பெட்டகத்தில்
இருட்டடிக்கப்பட்ட
இந்திய சரித்திரமே
ஈரோட்டில் சோறுட்டப்பட்டவை!

சுண்டைக்காய் நீ,
யாரோ சில தலைவெட்டிகளுக்கு
தாலாட்டுப் பாட
ஈரோட்டுச் சுடரொளியை
எழுத்துவிரல் கொண்டு மறைக்கப் பார்க்கிறாய்!
உன்னை அலட்சியப்படுத்துகிறோம்,
ஆனால் எச்சரிக்கின்றோம்!

எங்கள்,
வார்த்தைகள் கூட உன்
காவிய வாக்கியங்களை காயடித்துவிடும்!
உன்,
கற்பனைத் துணிக்கொடியை
அரைக்கம்பத்தில் பறக்கவிட்டுவிடும்!

மரியாதக்குரிய மாநில அரசே!
மதுவை ஒழிப்போமென்று
மார் தட்டிக்கொண்டே
ஒரு பீப்பாயைக்
கொலுவேற்றிய கொள்கை என்ன?
“பெரியார் விழாவெளிச்சத்தில் -
முன்பு
“காணிக்கையாக்கியதைக்
கேளிக்கையாக்கிடாதீர்கள்!
                               -: விடுதலை-13.03.1979
ஆஸ்தானக் கவிஞராய் வீற்றிருந்த கவிஞர் கண்ணதாசன் தந்தை பெரியார் குடும்பத்தப் பற்றி அவதூறாக எழுதியபோது, அதன் எதிர்வினையாக எழுதியது. 
அன்னை மணியம்மையார் நினைவு நாளில் இதனை மீண்டும் பதிவு செய்கின்றேன். நன்றி - விடுதலை
.................................................................................................


09 மார்ச் 2015

உலக கண் நீர் அழுத்த வாரம்

உலக கண் நீர் அழுத்த வாரம்


 WORLD GLAUCOMA WEEK – March 08-14

உலக கண் நீர் அழுத்த நோய் மருத்துவர்கள் சங்கமும், உலக கண் நீர் அழுத்த நோயாளிகள் சங்கமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 2-வது வாரம் உலக கண் நீர் அழுத்த வாரமாக கடைப்பிடிக்கின்றனர். இந்நோய் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நடத்தப்படுகின்ற நிகழ்வு அது. இந்த ஆண்டு மார்ச் 08 முதல் 14 வரை நடைபெறுகின்றது.
க்ளாக்கோமா ( Glaucoma ) என்பது கண் நீர் அழுத்த நோய் ஆகும்..கண் நீர் அழுத்தம் இயல்பாக 11 லிருந்து 21 mmHg இருக்க வேண்டும். இந்த அழுத்தம் அதிகரிக்கின்றபோது அல்லது வேறுபடுகின்றபோது கண் நீர் அழுத்த நோய் ஏற்படுகின்றது. இதனால் கண்ணின் பார்வை நரம்பு இழைகள் பாதிக்கப்படுகின்றன. மேலும் பிம்பங்களை மூளைக்கு கொண்டு செல்லும் நரம்புகளும் செயலிழக்கின்றன.
இந்நோயால் நமது நாட்டில் 1.2 கோடி பேரும், உலக அளவில் 6.5 கோடி பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரம் சொல்கிறது..குறிப்பாக, இந்த நோய் பாதிப்படைந்த இந்தியர்களில் 95 விழுக்காட்டினர் பார்வையை இழக்கும் வரை இந்நோய் குறித்து அறியாமலேயே உள்ளனர். காரணம் பெரும்பாலும் இது பதுங்கி இருந்து பார்வையினைக் கொல்லக் கூடியது. நோய் பாதித்ததை விரைவில் கண்டறிந்தால் மேலும் பாதிப்படையாமல் தடுத்துவிட முடியும் .பார்வை இழந்த பிறகு இதனை சரிப்படுத்த முடியாது.
இது 40 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரக்கூடிய வாய்ப்புண்டு. அதுபோலவே குடும்பவழி – பரம்பரையாகவும் – வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இன்றைய மருத்துவத்தில் இதனை வராமல் தடுக்கவும், வந்துவிட்டால் கட்டுப்படுத்தவும் வழிகள் உண்டு. ஆனால் முழுவதுமாக பார்வை இழந்துவிட்டால் பார்வை மீளப்பெற வாய்ப்பில்லை. எனவே, தோழர்களே உங்களுக்கு வயது நாற்பதைக் கடந்து விட்டதெனில் ஒருமுறை முழுமையாக, முறையான கண் மருத்துவரிடம் சென்று சோதனை செய்துகொள்ளுங்கள்..
இதை நான் ஏன் பதிவு செய்கின்றேன் ?
.2013 – ஆகஸ்டில் நான் க்ளாக்கோமாவினால் பாதிக்கப்பட்டு வலது கண்ணில் பார்வையினை தற்காலிகமாக இழந்து பின் மீளப்பெற்றேன். அந்த நிகழ்வை அப்போது பதிவு செய்தேன்.  அந்தப்பதிவு மீண்டும் உங்கள் பார்வைக்கு.

மீண்டு  …  ம், பார்க்கின்றேன் !


18.08.2013 அன்று மதியத்திலிருந்தே எனது வலதுகண் பார்வையில் பனி படர்வதைப் போன்று கொஞ்சமாக உணர்ந்தேன். எனினும் அதை பெரிதாகக் கொள்ளவில்லை. ஆனால் மறுநாள் – 19ஆம் தேதி விடிந்தபோது எனது வலது கண்ணில் முற்றிலுமாகப் பார்வை இல்லை. உள்ளுக்குள் ஒரு பயம் இருந்தாலும் யாரிடமும் சொல்லாமல், வெளிக்காட்டிக் கொள்ளாமல் மெதுவாக என் துணைவியார் அறிவுச்செல்வியிடம்,“ அறிவு, எனக்கு வலது கண்ணில் பார்வை மறைக்கிற மாதிரி இருக்கு, உன்னை பனிக்குள்ள பாக்கறமாறி இருக்கு. இன்னக்கி லீவு போடுறியா? இங்க டாக்டரைப் பாக்கலாம்” என்று கேட்டபோது அவரின் அலுவலக நெருக்கடி காரணமாக இயலாத நிலையினைச் சொல்லி, இரவு எட்டு மணிக்கு வந்த பின்னால் டாக்டரிடம் போவோம் என்று சொல்லி, “உங்களுக்குத்தான் 24ஆம் தேதி சங்கரநேத்ராலயாவில் ( சென்னை ) அப்பாயிண்மெண்ட் இருக்குள்ளே பாத்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு திருச்சிக்கு (அலுவலகத்திற்கு)ப் போய்விட்டார்.
நான், காலை 9 மணிக்குமேல் மருத்துவர் திரு. ராஜ மணிகண்டன் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர், “ இப்படி விஷன் சட்டென்று போகக்கூடாது. நீங்க சங்கர நேத்ராலயாவை தொடர்பு கொண்டு பேசுங்கள். 24ஆம் தேதிவரை வெயிட் செய்ய வேண்டாம். கூடவே தஞ்சையிலேயே யாராவது டாக்டரைப் பாருங்கள்” என்று சொன்னார். உடனே தஞ்சையில் மருத்துவர்.ப. நல்லமுத்து அவர்களிடம் சென்று பரிசோதித்தபோது அவரும் அதையே சொல்லி, இரண்டு மாத்திரைகள் எழுதிக்கொடுத்து இது முதலுதவிதான், நீங்கள் உடனடியாக திருச்சி ஜோசப் போங்கள் என்றார். நான் கடந்த ஓராண்டாக சென்னை சங்கரநேத்ராலயாவில் சிகிச்சை எடுப்பதை சொல்லி அங்கேயே போகின்றேன் என்று சொல்லிவிட்டு அன்று இரவே  சென்னை புறப்பட்டு மறுநாள் காலை சங்கரநேத்ராலயா சென்று, அங்கு சிகிச்சை பெற முடியாத நிலையில் உடன் அன்று மாலை 5 மணிக்குள் திருச்சி, ஜோசப் கண் மருத்துவமனைக்கு வந்து 22ஆம் தேதி மாலை வரை சிகிச்சைப் பெற்று 23ஆம் தேதி மதியத்திலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக பார்வை வரப்பெற்று – இதோ, இப்போது வழமை போல ‘ வலது கண்ணாலும் ’ மீண்டும் பார்க்கும் நிலை வரப்பெற்றுள்ளேன்.
எனக்கு சிகிச்சை வழங்கிய தஞ்சை, கண் மருத்துவர் திருமிகு ப. நல்லமுத்து, திருச்சி, ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவர்கள் திருமிகு சுகண்யா, திருமிகு சுஜாதா, திருமிகு கலாவதி, மற்றும் பெயர் தெரியாத துணை மருத்துவர்கள், செவிலியர்களுக்கும்,
என் முகமறியாமலேலே சென்னை, சங்கரநேத்ராலயாவில் எனக்காக முயற்சித்த அந்த மருத்துவமனையின் மருத்துவர் திருமிகு விஜயகுமார் மற்றும் திருவரங்கம் எல் ஐ சி பாலா அவர்களுக்கும், திருமிகு அறிவுக்கடல் அவர்களுக்கும், சென்னை, சங்கரநேத்ராலயாவில் சிகிச்சை பெறமுடியாத நிலையில், திருச்சி, ஜோசப் கண் மருத்துவமனையில் திருமிகு கலியமூர்த்தியிடம் தொடர்புகொண்டு, சிகிச்சை பெற ஏற்பாடு செய்து உடனிருந்த திருமிகு அறிவுச்சுடர் இரவிக்குமார் அவர்களுக்கும்,
எதுவாக இருந்தாலும் எதிர்கொள்ள என்னைப் பக்குவப்படுத்திய என் துணைவி அறிவுச்செல்வி, அன்பு மகள் தென்றல், எல்லா நிலைகளிலும் எங்கள் துணையாக உடன் வருகின்ற தோழனும், மருமகனுமாகிய கிறிஸ்டோபர் டோமினிக் இவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
 செய்தி அறிந்து உடன் அலைபேசியிலும், நேரிலும் தொடர்புகொண்டு நலம் பெற விழைந்த அண்ணன் கொளத்தூர் மணி, வழக்கறிஞர் குமாரதேவன், அன்வர் பாலசிங்கம், சோலை.மாரியப்பன், ஜவகர், பொறியாளர் மணிவண்ணன், தோழர் பாலன், அண்டனி, புலவர் செல்லகலைவாணன், வழக்கறிஞர்கள் மா.கருணாநிதி, கோ.கருணாநிதி, பாரதிபுத்தகாலயம் நாகராஜன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியும், வணக்கங்களும்.
அதுபோன்றே ‘அப்படியா’ என்று உள்ளுக்குள் மகிழ்ந்த இனிய நண்பர்களுக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இங்கே ஒரு செய்தியினை பதிவு செய்ய வேண்டும். திருச்சி ஜோசப் மருத்துவமனை மருத்துவர்கள், என் துணைவியாரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “முழுமையாக குணமடைய இரண்டு மாதங்களாவது ஆகும். அதுவரை படிப்பது, எழுதுவது குறிப்பாக சிஸ்டத்தில் – கணனி – இருப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்றார்கள். அப்போது,“ அப்படியா அவர் படிக்க வாங்கி வைத்திருக்கிற புத்தகங்களே நிறைய இருக்கிறதே, அவர் எழுத வேண்டியதும் நிறைய இருக்கிறதே” என்றார் என் துணைவியார்.
ஆம், இதோ மீண்டு …. ம் …,  பார்க்கின்றேன் !
விரைவில் “ நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வருகிறது ? ,
பச்சைத் தீ ( வெண்மணி பதிவுகள் ), ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும்-நிகழ்வுகளும் ஆகிய மூன்று தொகுப்புகளும் உங்கள் கைகளில் !
நன்றியும் தோழமையுடனும்,
பசு. கவுதமன்.
09.09.2013,

தஞ்சாவூர்.

08 மார்ச் 2015

உலக உழைக்கும் மகளிர்நாள் - சிந்தனை



உலக உழைக்கும் மகளிர் தினத்தில் எதை பதிவு செய்வது என்று யோசித்தபோது – இந்திய, தமிழ்ச்சூழலில் “ செழுமைப்படுத்தப்பட்ட மார்க்சியமே – பெரியாரியம் ” என்று தோழர் ஏஜிகே சொன்னது நினைவுக்கு வந்தது.
எந்த ஒரு தத்துவஞானியாலும் பதிவு செய்யப்படாத – ஆனால் தந்தை பெரியார் அவர்களால் பதிவு செய்யப்பட்ட இந்த  ‘இரங்கலுரை இலக்கியத்தை’ இன்றைய தினத்தில் மீள்பதிவு செய்வது சிந்தனைக்குரியது.
முதலில் இதைப் படித்துவிட்டு தொடர்ந்து, நாகம்மையார் மறைவு இரங்கலுரையினை படியுங்கள்.

… ஆண்கள்,பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெறமுடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக்கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக்கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல.
எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடி, கோழி களுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளக்காரர்களால் இந்தியர்களுக்கு செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் , பார்ப்பனரல்லாதார்களுக்கு சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும்…
குடிஅரசு – 12.08.1928. ( பெண் ஏன் அடிமையானாள்? 10ஆம் அத்தியாத்திலிருந்து )




எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா
(நாகம்மாள் மறைவு)  d
¨ª>òç\Ý mçðs, gòlì ïV>o åVïD\V^ 11.5.1933Í ¼>] \Vçé 7.45 \èÂz gs ÀÝ>Vì. Ö>uïVï åV[ mÂï©Ã|k>V?  \þµßEBç¦k>V?  åVïD\V^ åoÍm \çÅÍ>m ¨ªÂz ÖéVÃ\V, åi¦\V ¨[Ãm Öm Ä\BD x½¡ ï⦠x½BV> ïVöB\VF ÖòÂþÅm.
¨©Ã½lòÍ>VKD, åVïD\Vçe \ðÍm kVµÂçïÝ mçðBVï ØïVõ| 35 kò¦ ïVéD kVµÍm s⼦[.  åVïD\Vçe åV[ >V[ kVµÂçïÝmçðsBVï ØïVõ| Öòͼ>¼ªB_éV\_ åVïD\VÓÂz åV[ kVµÂçïÝmçðBVï Öòͼ>ªV ¨[Ãm ¨ªÂ¼ï QVÃïÝmÂz k«s_çé.  åV[ ·Båé kVµs_ ç\ª«VF. ïVoBVF, æ\VªVF ÖòÍ> ïVéÝ]KD, ØÃVm åé kVµs_ ~|Ãâ|Ý Ø>Võ¦ªVF ÖòÍ> ïVéÝ]KD ¨ªÂz kVµs[ ÎËØkVò mçÅl[ xu¼ÃVÂzÂzD åVïD\V^ ¨Ëke¼kV g>V«\VF ÖòÍ>Vì ¨[Ãm \ÅÂï x½BV> ïVöBD.  ØÃõï^ ·>Í]« s­B\Vï¡D, ØÃõï^ ØÃòç\ s­B\Vï¡D ¸ÅÝ]BVòÂz åV[ ¨Ëke¡ ¼Ã·þ¼Å¼ªV ‡ ¼ÃV]Âþ¼Å¼ªV ¶]_ ±u¤_ Îò úz T>\Vkm
¨[ªòç\ åVïD\V^ s­BÝ]_ åV[ å¦Ím ØïVõ½òͼ>[ ¨[® ØÄV_o ØïV^e ¨ªÂz x¿
¼BVÂþBç> Ö_çé.
gªV_ åVïD\V¼eV ØÃõ ¶½ç\ s­B\Vï¡D gõ cBì¡ s­B\Vï¡D, ÄVü]« A«Vðºï¹_ ¨Ëke¡ ØïV|ç\BVï¡D JìÂï\Vï¡D z¤©¸â½òÍ>¼>V ¶ku®^ Î[®Âz© ÃÝ>Vï å¦Ím ØïVõ½òÍ>Vì ¨[Ãç>¥D ¶ç> åV[ °u®Â ØïVõ½òͼ>[ ¨[Ãç>¥D tzÍ> ØkâïÝm¦[ Øk¹l|þ¼Å[.
åVïD\V^ clì kVµÍ>mD, kVw gçÄ©Ãâ¦mD ¨ªÂïVï¼k ÎaB >ªÂïVï ¶_é ¨[Ãç> åV[
ÎËØkVò såV½¥D å[ÅVF cðìÍm kͼ>[.  ÖçkïÓÂØï_éVD åV[ ØÄV_éÂí½B °>VkØ>Vò Ä\V>VªD cõئ[ÅV_ ¶m Økz E¤B Ä\V>Vª¼\BVzD.       
¶Ø>[ªØk[ÅV_, åVïD\V¹[ ÖËke¡ ïVöBºïçe¥D åV[ ØÃVmåé ¼Äçkl_ ~|Ãâ¦
¸Åz ØÃVmåé ïVöBºïÓÂzD, EÅ©ÃVïß ·B\öBVç> ÖBÂïÝ]uz¼\ ÃB[Ã|Ý] kͼ>[ ¨[Ãm >V[. åVïD\V^ åV[ ïVºþ«EoòÂzD ¼ÃVm \¤B_ s­Bºï¹KD, çkÂïD ÄÝ]BVÂþ«ï s­BÝ]KD, ·B\öBVç> ÖBÂïÝ]KD ÎÝmçwÝm kÍ>m céïD ¶¤Í>>VzD.
gï¼k, åVïD\V^ \çÅÍ>m ¨ªÂz Îò ¶½ç\ ¼ÃVluØÅ[® ØÄV_éâ|\V?  g>«¡ ¼ÃVluØÅ[®ØÄV_éâ|\V?  Ö[ÃD ¼ÃVluØÅ[® ØÄV_éâ|\V?  cðìßE ¼ÃVluØÅ[® ØÄV_éâ|\V?
»ÂïD ¼ÃVluØÅ[® ØÄV_éâ|\V?  ¨_éVD ¼ÃVluØÅ[® ØÄV_éâ|\V? ¨m¡D seºï
s_çé¼B !
¨m ¨©Ã½lòÍ> ¼ÃV]KD, åVïD\V^ \çÅ¡ Îò ¶]ÄB ïVöB\_é.  åVïD\V^ ÖBuçï
¨F]ªVì. Ö]ØéV[®D ¶]ÄBt_çé.
åVïD\Vçe ¶uà g¥^ïVöØB[® BVòD ØÄV_os¦ x½BVm.  åVïD\VÓÂz 48 kBm
gª¼ÃV]KD, ¶m \M> g¥¹_ Ãz]¼ï E¤m zçÅBVª ¼ÃV]KD ÖÍ]B \Âï¹_ Ä«VÄö
kVµåVeVþB 23 ½(ÖòÃÝ] J[Åç«) kBmÂz ֫⽩ØÃ[¼Å ØÄV_é ¼kõ|D.  ØÄÝ>V_ EöÂï
¼kõ|D; ¸ÅÍ>V_ ¶w ¼kõ|D ¨[Å QVªØ\Va©Ã½ åVïD\V^ ØÄÝ>ç> Îò mÂï ÄDÃk\Vï¡D Îò åi¦ ÄDÃk\Vï¡D ïò>V\_, ¶ç> Îò \þµßEBVï¡D, ÖéVÃ\Vï¡D ïò>¼kõ|D ¨[¼Å
åV[ gçÄ©Ã|þ[¼Å[.  gçÄ©Ã|km \VÝ]«\_éV\_ ¶ç> cõç\ØB[®D ïòmþ¼Å[.  
¨©Ã½ØBM_, ¨ªm kVµåV^ ÄöÝ]«Ý]_ ÖM Wïw© ¼ÃVzD ¶Ý]BVBºï¼eV E¤m s¼Ä­Ä ÄDÃkºïeVï ÖòÍ>VKD ÖòÂïéVD.  ¶ç> åVïD\V^ ÖòÍm ÃVìÂï ¼åöâ¦V_ ¶Í> ¶D\VÓÂz ¶çk tzÍ> mÂï\Vï¡D mB«\Vï¡D ïVðÂí½B>VF ÖòÂzD ¨[Ã]_ 
E¤mD Äͼ>ïtòÂïVm.  ¶Ým¦[ ¶ç>Âïõ| ÄþBV> xçÅl_ BVÐD E¤m ïéºïÂí|D.
g>éV_, åVïD\V^ \çÅkV_ ¨ªÂz ¶]ï ·>Í]«D °uÃâ¦m¦[ z|DÃÝØ>V_çé ÎaÍ>m ¨[þ[Å {ì cBì Ã>sçB¥D ¶ç¦B Ö¦¼\uÃâ¦m.
Öm Wuï, åVïD\V^ \çÅçk åV[ ¨Ëke¡ \þµßEBVª ïVöBÝ]uzD ÖéVÃ\Vª ïVöBÝ]uzD ÃB[Ã|Ý] ØïV^þ[¼Å¼ªV ¶Í> \V]ö ¨ªm \çÅçk¼BV ¨ªm åoçk¼BV åVïD\V^cüBVï©Ã|Ý] ØïV^e\Vâ¦Vì.  ¶>uz ¼åØ«]öç¦BVÂzk>u¼ï cüBVþÝm ØïV^kVì. g>éV_, åVïD\V^ åéÝç> ¼ïVö¥D, åVïD\V^ ¨ªÂz x[ \çÅÍ>m ¨Ëke¼kV å[ç\.
¨[ªòç\Ý ¼>Vwìï^ ÃéòÂz åVïD\V^ \çÅ¡ ~|Ã|Ý>x½BV> åi¦D ¨[® ¼>V[ÅéVD.  ¶m ÄöBVª ¶¸©¸«VB\_é.  ¶kìï^ Äu®© ØÃV®ç\BVF ÖòÍm, ÖM å¦Âï ÖòÂzD WïµßE
ïçe ïVõÃVìï¼eBVªV_ ¶kìïÓD ¨[窩 ¼ÃVé¼k åVïD\V^ \çÅ¡ åéØ\[¼Å ïòmkVìï^.  åVïD\VÓÂz ïVBéV °uÃ⦠ïV«ð¼\, ¨ªm ¼\_åVâ|ß ·u®© ¸«BVðD ïV«ð\VF Îòkò¦ ïVéD ¸öÍm ÖòÍ]òÂï ¼åìÍ> ¸ökVuÅVç\¼B xÂþB ïV«ðD.  Ö«õ¦Vkm, «iB BVÝ]ç«lªV_ ¨ªÂz °¼>V ØÃöB gÃÝm kòD ¨[® ïò]Bm.
J[ÅVk>Vï, å\m A]B ¼kçéÝ ]⦺ïçe cðìÍ> ¸[ ÎËØkVò Wt­xD >ªÂz^ °uÃâ¦
ÃBD.  gþB ֩ý©Ã⦠¶uà ïV«ðºï¼e ¶ËkDç\Âz íuÅVï W[Åm ¨[ÅV_, ÖM ÖkuçÅs¦ ¼\éVª>Vª ¸ö¡, gÃÝm, ØÃVòeV>V«Â ïi¦D x>oBçk cõç\BVF °uæ ÖòÂzD Wçé ¶ËkDç\Âz ¨Ëke¡ ïi¦\VF ÖòÂzD ¨[® WçªÝm©ÃVìÂzD ¼>Vwìï^ åVïD\V^ \çÅ¡Âz kòÍ> \Vâ¦Vìï^ ¨[¼Å ïòmþ¼Å[.  2,3 kò¦ºïÓÂz x[¸òͼ> åV[ ÖM ÖòÂzD kVµåV^x¿kç>¥D ĺï«VßÄVöï^ ¼ÃVé (¶Ëke¡ g¦DëÝm¦ª_é ‡Ãð kóKÂïVï ¶_é) ÄÞÄV«Ý]¼é¼B, ·u®© ¸«BVðÝ]¼é¼B ÖòÂï ¼kõ|D ¨[®D 
å\ÂØï[® Îò >M T¼¦V ¶_émz¤©¸â¦ Ö¦Ý]_ W«Í>« kVļ\V ¨[Ãm í¦VØ>[®D ïò] ÖòÍ>m cõ|.  gªV_, ¶>uz ¼k® ¨Ës>Ý>禥D ÖòÍ]òÂïs_çéØB[ÅVKD åVïD\V^ ØÃöB >ç¦BVF ÖòÍ>Vì.  Ö©¼ÃVm ¶Í>Ý >ç¦ Ö_éV\_ ¼ÃVªm Îò ØÃöB \þµßEÂzöB ïVöB\VzD.  g>éV_, åVïD\V^ x½¡ å\Âz å[ç\çBÝ >òk>Vzï!
                                                                                                                    z½ ¶«· ‡  14.5.1933